இசை : ஹாரிஸ் ஜெயராஜ் | பாடல் : நா.முத்துகுமார் |
குரல்கள் : ஸ்ரீராம் பார்த்தசாரதி பாம்பே ஜெயஸ்ரீ | வருடம் : 2005 |
சுட்டும் விழிச்சுடரே...சுட்டும் விழிச்சுடரே...
என்னுலகம் உன்னைச் சுற்றுதே
சட்டைப்பையில் உன் படம்
தொட்டுத்தொட்டு உரச என்னிதயம் பற்றிக் கொள்ளுதே
உன்விழியில் விழுந்தேன் விண்வெளியில் பறந்தேன்
கண்விழித்து சொப்பனம் கண்டேன் - உன்னாலே
கண்விழித்து சொப்பனம் கண்டேன்....
(சுட்டும் விழிச்சுடரே...சுட்டும் விழிச்சுடரே...
மெல்லினம் மார்பில் கண்டேன் வல்லினம் விழியில் கண்டேன்
இடையினம் தேடி இல்லை என்றேன்...
தூக்கத்தில் உளறல் கொண்டேன் தூரலில் விரும்பி நின்றேன்
தும்மல் வந்தால் உன் நினைவைக் கொண்டேன்
கருப்பு வெள்ளை பூக்கள் உண்டா
உன் கண்ணில் நான் கண்டேன் - உன் கண்கள்
வண்டை உண்ணும் பூக்கள் என்றேன்
வண்டை உண்ணும் பூக்கள் என்றேன்
(சுட்டும் விழிச்சுடரே...சுட்டும் விழிச்சுடரே...
மரங்கொத்திப் பறவையொன்று மனங்கொத்திப் போனதென்று
உடல் முதல் உயிர்வரை தந்தேன்
தீயின்றி திரியுமின்றி மேகங்கள் எரியுமென்று
இன்றுதானே நானும் கண்டுகொண்டேன்
மழை அழகா வெயில் அழகா
கொஞ்சும்போது மழை அழகு - கண்ணா நீ
கோவப்பட்டால் வெயில் அழகு - கண்ணா நீ
கோவப்பட்டால் வெயில் அழகு
(சுட்டும் விழிச்சுடரே...சுட்டும் விழிச்சுடரே...
No comments:
Post a Comment