Thursday 28 April 2011

தென்பாண்டித் தமிழே - பாசப் பறவைகள்



 இசை : இளையராஜா  பாடல் : கங்கை அமரன்
 குரல்கள் : கே.ஜே.ஜேசுதாஸ்  வருடம் : 1988

தென்பாண்டித் தமிழே என் சிங்காரக் குயிலே
தென்பாண்டித் தமிழே என் சிங்காரக் குயிலே
இசை பாடும் ஒரு காவியம் இது ரவிவர்மாவின் ஓவியம்
பாசம் என்னும் ஆலயம் உனை பாட வேண்டும் ஆயிரம்

தென்பாண்டித் தமிழே என் சிங்காரக் குயிலே
தென்பாண்டித் தமிழே என் சிங்காரக் குயிலே

வாழ்த்தி உன்னை பாடவே வார்த்தை தோன்றவில்லையே
பார்த்து பார்த்து கண்ணிலே பாசம் மாறவில்லையே
அன்பு என்னும் கூண்டிலே ஆடிப் பாடும் பூங்குயில்
ஆசை தீபம் ஏற்றுதே அண்ணன் உன்னை போற்றுதே
தாவி வந்த பிள்ளையே தாயைப் பார்த்ததில்லையே
தாவி வந்த பிள்ளையே தாயைப் பார்த்ததில்லையே
தாயைப் போல பார்க்கிறேன் வேறு பார்வை இல்லையே
மஞ்சளோடு குங்குமம் கொண்டு வாழ வேண்டுமே
நீ என்றும் வாழ வேண்டுமே

தென்பாண்டித் தமிழே என் சிங்காரக் குயிலே
தென்பாண்டித் தமிழே என் சிங்காரக் குயிலே
இசை பாடும் ஒரு காவியம் இது ரவிவர்மாவின் ஓவியம்
பாசம் என்னும் ஆலயம் உனை பாட வேண்டும் ஆயிரம்

தென்பாண்டித் தமிழே என் சிங்காரக் குயிலே

தேகம் வேறு ஆகலாம் ஜீவன் ஒன்றுதானம்மா
அன்பு கொண்டு பாடிடும் அண்ணன் என்னைப் பாரம்மா
கோவில் தேவை இல்லையே நேரில் வந்த கோவிலே
பாடும் எந்தன் பாவிலே நாளும் வாழும் தேவனே
கூடு வாழும் குருவிகள் பாடும் பாசப் பறவைகள்
கூடு வாழும் குருவிகள் பாடும் பாசப் பறவைகள்
வாழ்த்துவேன் உனை போற்றுவேன் வாழ்வெல்லாம் உனை ஏற்றுவேன்
காலம் காலம் யாவிலும் சேர்ந்து வாழ வேண்டுமே
நாம் சேர்ந்து வாழ வேண்டுமே

தென்பாண்டித் தமிழே என் சிங்காரக் குயிலே
தென்பாண்டித் தமிழே என் சிங்காரக் குயிலே
இசை பாடும் ஒரு காவியம் இது ரவிவர்மாவின் ஓவியம்
பாசம் என்னும் ஆலயம் உனை பாட வேண்டும் ஆயிரம்

தென்பாண்டித் தமிழே என் சிங்காரக் குயிலே
தென்பாண்டித் தமிழே என் சிங்காரக் குயிலே

No comments: