Tuesday 19 April 2011

காதல் வந்தால் சொல்லி - இயற்கை



 இசை : வித்யாசாகர்  பாடல் : வைரமுத்து
 குரல்கள் : திப்பு  வருடம் : 2003

காதல் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரோடிருந்தால் வருகிறேன்
என் கண்ணீர் வழியே.. உயிரும் வழிய..
கரையில் கரைந்து கிடக்கிறேன்
சுட்ட மண்ணிலே மீனாக - மனம்
வெட்டவெளியிலே வாடுதடி
சுட்ட மண்ணிலே மீனாக -மனம்
வெட்டவெளியிலே வாடுதடி
கண்ணீர் கலந்து கண்ணீர் கலந்து
கடல்நீர் மட்டம் கூடுதடி...

( காதல் வந்தால்...

உயிரைத் தவிர சொந்தம் இல்லையே காதலிக்கும் முன்பு
இந்த உலகே எந்தன் சொந்தமானதே காதல் வந்த பின்பு
சாவை அழைத்து கடிதம் போட்டேன் காதலிக்கும் முன்பு
ஒரு சாவை புதைக்க சக்தி கேட்கிறேன் காதல் வந்த பின்பு
உன்னால் என் கடலலை உறங்கவே இல்லை
உன்னால் என் நிலவுக்கு உடல் நலமில்லை
கடல் துயில் கொள்வதும் நிலா குணம் கொள்வதும்
நான் உயிர் வாழ்வதும் உன் சொல்லில் உள்ளதடி..
உன் இறுக்கம்தான் என்னுயிரை கொல்லுதடி கொல்லுதடி

( காதல் வந்தால்...

பிறந்த மண்ணை அள்ளித் தின்றேன் உன்னை காணும் முன்பு - நீ
நடந்த மண்ணை அள்ளித் தின்றேன் உன்னைக் கண்ட பின்பு
அன்னை தந்தை கண்டதில்லை நான் கண்திறந்த பின்பு - என்
அத்தனை உறவும் மொத்தம் கண்டேன் உன்னைக் கண்ட பின்பு
பெண்ணே என் பயணமோ தொடங்கவே இல்லை
அதற்குள் அது முடிவதா விளங்கவே இல்லை
நான் கரையாவதும் இல்லை நுரையாவதும்
வளர் பிறையாவதும் உன் சொல்லில் உள்ளதடி
உன் இறுக்கம்தான் என்னுயிரை கொல்லுதடி கொல்லுதடி..

காதல் வந்தால் சொல்லி அனுப்பு
காதல் வந்தால் சொல்லி அனுப்பு
சொல்லி அனுப்பு சொல்லி அனுப்பு

No comments: