Sunday 18 September 2011

ஒரு மலையோரம் - அவன் இவன்



 இசை : யுவன்ஷங்கர் ராஜா  பாடல் : நா.முத்துகுமார்
 குரல்கள் : விஜய் ஜேசுதாஸ்-பேபி ஸ்ரீநிஷா
பேபி பிரியங்கா - பேபி நித்யஸ்ரீ
 வருடம் : 2011

ஒரு மலையோரம்
அங்கு கொஞ்சம் மேகம்
அதன் அடிவாரம் ஒரு வீடு
உன் கைகோர்த்து என் தலைசாய்க்க
அங்கு வேண்டுமடா என் கூடு
செல்லங்கொஞ்சி நீ பேச உள்ளமுருகி நான் கேட்க
அந்த நிமிடம் போதுமடா... இந்த ஜென்மம் தீருமடா...
ஹோ... ஹோ...

( ஒரு மலையோரம்...

பெண்ணே முதல்முறை உன் அருகிலே வாழ்கிறேன்
போதும் போதும் விடு உன் நினைவிலே தோய்கிறேன்
என்னானது எந்தன் நெஞ்சம் ஏனிந்த மாற்றமோ
பெண்ணானதும் நாணம் வந்து தன் வேலையைக் காட்டுமோ
உன் எதிரிலே....ஏ...ஏ...
எதுவுமே பேசிட வேண்டாம்
மௌனங்கள் ஆயிரம் பேசுமே
என்னுள்ளிருந்து நீ பேச
இன்னுமென்ன நான் பேச
இந்த மயக்கம் போதுமடி
இன்னும் நெருக்கம் வேண்டுமடி...ஹோ..ஹோ...

( ஒரு மலையோரம்...

உன்னைக் காணும்வரை நான் கனவிலே வாழ்ந்தவன்
உன்னைக் கண்டேன் பெண்ணே உன் நினைவிலே வாழ்கிறேன்
என் தனிமையின் ஓரம் வந்து இனிமைகள் ஊட்டினாய்
என் தாயிடம் பேசும் போதும் வெறுமையைக் கூட்டினாய்
நம் காதலிலே....ஏ...ஏ...
மனமது புகையினை போலே
மறைத்தவர் யாருமே இல்லை
என்னுள் நீ சேர்ந்திருக்க
எங்கே எனை நான் மறைக்க
இந்த வார்த்தை போதுமடி
எந்தன் வாழ்க்கை மாறுமடி... பெண்ணே...

No comments: