இசை : பாரதிதாசன் | பாடல் : பாரதிதாசன் |
குரல்கள் : நித்யஸ்ரீ மகாதேவன் | வருடம் : - - - - |
வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே !
மாண்புகள் நீயே என் தமிழ் தாயே !
வீழ்வாரை வீழாது காப்பவள் நீயே ;
வீரனின் வீரமும், வெற்றியும் நீயே !
தாழ்ந்திடு நிலையினில் உனைவிடுப் பேனோ
தமிழன் எந்நாளும் தலைகுனி வேனோ
சூழ்ந்தின்பம் நல்கிடும் பைந்தமிழ் அன்னாய்
தோன்றுடல் நீ உயிர் நான்மறப் பேனோ?
செந்தமிழே உயிரே நறுந் தேனே
செயலினை மூச்சினை உனக்களித் தேனே
நைந்தா யெனில்நைந்து போகுமென் வாழ்வு
நன்னிலை உனக்கெனில் எனக்குந் தானே !
முந்திய நாளினில் அறிவும் இலாது
மொய்த்தநன் மனிதராம் புதுப்புனல் மீது
செந்தாமரைக் காடு பூத்தது போல
செழித்தஎன் தமிழே ஒளியே வாழி !
செழித்தஎன் தமிழே ஒளியே வாழி !
செழித்தஎன் தமிழே ஒளியே வாழி !
No comments:
Post a Comment