இசை : | பாடல் : பாரதிதாசன் |
குரல்கள் : நித்யஸ்ரீ மகாதேவன் | வருடம் : ---- |
எழில்மிகு தமிழ்நாடு
எல்லாம் இருந்த தமிழ்நாடு
படிப்பில்லாமல்
பொல்லாங் கடைந்தது பிற்பாடு,
சொல்லும் இயற்கை தரும் செல்வம்
இல்லை என்னாமல்
நெல்லும் சுவை முக்கனி
நெய் பால் கரும்பு வெல்லம்
( எல்லாம் இருந்த...
தென்றல் சிலிர்க்க வரும் சோலை
தனிற்குயிலும்
தேன்சிட்டும் பாடும் அங்கு மாலை
மணக்கும் மலர்
ஒன்றல்ல மூலைக்கு மூலை
தெருக்கள் தொறும்
ஒரத்தில் நிழல் தரும் சாலை
இடையிடையே
தென்னை மாதுளைகள் வாய்ப்பு
வாழை மரத்தில்
தேனாகத் தொங்கும் பழச்சீப்பு
விளா இலந்தை
எந்நாளுமே கொடுக்கும் காய்ப்பு
குலுங்கும் எலி
மிச்சை நாவல் எங்கும் தோப்பு
உலகினிலே
எங்கும் இல்லை இப்படி
என்பது கவிஞர் தீர்ப்பு!
( எல்லாம் இருந்த...
No comments:
Post a Comment