இசை : இளையராஜா | பாடல் : கவிஞர் வாலி |
குரல்கள் : | வருடம் : 1992 |
பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும்
பாவ சொகுசு பார்க்க கோடி பெறும் கோடி பெறும்
பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும்
பாவ சொகுசு பார்க்க கோடி பெறும் கோடி பெறும்
சித்தாடை போட்ட சின்னமணித்தேரு
சில்லென்னு பூத்த செவ்வரளிப்பூவு
செப்பால செஞ்சு வச்ச அம்மன் செலதான்..
( பாத கொலுசு...
குத்தால மேகமெல்லாம் கூந்தலிலே நீந்தி வரும்
கொய்யாத மாங்கனியை கொடியிடை தான் ஏந்தி வரும்
மத்தாப்பு வானமெல்லாம் வாய்சிரிப்பு காட்டி வரும்
மானோடு மீனிரண்டை மைவிழியோ கூட்டி வரும்
பொன்னாக ஜொலிக்கும் பெண்பாவை அழகு
ஒன்னாக கலந்த முந்நூறு நிலவு
பொட்டோடு பூவும் கொண்டு தாவும் மயில் தான்
(பாத கொலுசு)
செஞ்சாந்து குழம்பெடுத்து தீட்டி வச்ச சித்திரமே
தென்பாண்டி கடல் குளித்து கொண்டு வந்த முத்தினமே
தொட்டாலும் கை மணக்கும் தென்பழனி சந்தனமே
தென்காசித் தூறலிலே கண்விழித்த செண்பகமே
பெண்ணாக பிறந்த பல்லாக்கு நீயோ
ஈரேழு உலகில் ஈடாக யாரோ
நெஞ்சோடு கூடு கட்டி கூவும் குயிலோ
( பாத கொலுசு...
பெண்ணென்ற ஜாதியிலே ஆயிரத்தில் அவளொருத்தி
பொன் வைரம் கொடுத்தாலும் போதாது சீர்செனத்தி
கல்யாண பந்தலிலே நான் அவளை நேர் நிறுத்தி
பூமாலை சூட்டிடுவேன் மாப்பிள்ளை நான் பட்டு உடுத்தி
அன்றாடம் அலைந்து எங்கேயும் தேடி
கண்டேனே எனக்கு தோதான ஜோடி
வந்தாச்சு காலநேரம் மாலையிடத்தான்
( பாத கொலுசு...
No comments:
Post a Comment