Thursday 21 April 2011

சின்னச் சின்ன தூறல் - செந்தமிழ் பாட்டு



 இசை : இளையராஜா  பாடல் :
 குரல்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்  வருடம் : 1992


சின்னச் சின்ன தூறல் என்ன
என்னைக் கொஞ்சும் சாரல் என்ன
சிந்தச் சிந்த ஆவல் பின்ன
நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன

( சின்ன சின்ன...

உனது தூறலும் இனிய சாரலும்
தீண்டும் மேகம் சிலிர்க்குதம்மா...

அது தீண்டும் மேகமில்ல..
தேகம் சிலிர்க்குதம்மா..

உனது தூறலும் இனிய சாரலும்
தீண்டும் தேகம் சிலிர்க்குதம்மா
நனைந்த பொழுதிலும் குளிர்ந்த மனதினில்
ஏதோ ஆசை துடிக்குதம்மா
மனித ஜாதியின் பசியும் தாகமும்
உன்னால் என்றும் தீருமம்மா
வாரித் தந்த வள்ளல் என்று
பாரில் உன்னைச் சொல்வதுண்டு
இனமும் குலமும் இருக்கும் உலகில்
அனைவரும் இங்கு சரிசமம் என உணர்த்திடும் மழையே..

( சின்ன சின்ன...

பிழைக்கு யாவரும் தவிக்கும் நாட்களில்
நீயோ இங்கே வருவதில்லை

படிச்சவன் பாட்டை கெடுத்தான் கதையால்ல இருக்கு
பிழைக்கும்ன்னு எழுதலையே..
மழைக்குன்னுதானே எழுதியிருக்கேன்...

மழைக்கு யாவரும் தவிக்கும் நாட்களில்
நீயோ இங்கே வருவதில்லை
வெடித்த பூமியும் மானம் பார்க்கையில்
நீயோ கண்ணில் தெரிவதில்லை
உனது சேத்யை பொழியும் தேதியை
முன்னால் இங்கே யாரறிவார்
நஞ்சை மண்ணும் புஞ்சை மண்ணும்
நீயும் வந்தால் பொன்னாய் மின்னும்
உனது பெருமை உலகம் அறியும்
இடிஎனும் இசை முழங்கிட வரும் மழையெனும் மகளே..

( சின்ன சின்ன...

No comments: