இசை : இளையராஜா | பாடல் : வைரமுத்து |
குரல்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஜானகி | வருடம் : 1981 |
ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து
ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
இங்கிரண்டு ஜாதி மல்லிகை
தொட்டுக்கொள்ளும் காமன் பண்டிகை
கோவிலில் காதல் தொழுகை
(ஆயிரம் தாமரை..
ஓ கொத்துமலரே அமுதம் கொட்டும் மலரே
இங்கு தேனை ஊற்று இது தீயின் ஊற்று
ஓ கொத்துமலரே அமுதம் கொட்டும் மலரே
இங்கு தேனை ஊற்று இது தீயின் ஊற்று
உள்ளிருக்கும் வேர்வை வந்து நீர் வார்க்கும்
புல்லரிக்கும் மேனி எங்கும் பூப்பூக்கும்
அடிக்கடி தாகம் வந்து ஆளை குடிக்கும்
(ஆயிரம் தாமரை...
ஏ வீட்டுக்கிளியே கூண்டை விட்டுத் தாண்டி வந்தியே
ஒரு காதல் பாரம் இரு தோளில் ஏறும்
புல்வெளியின் மீது ரெண்டு பூமாலை
ஒன்றையொன்று சூடும் இது பொன் மேடை
கள் வடியும் பூக்கள் தங்கள் காம்பை மறக்கும்
(ஆயிரம் தாமரை...
No comments:
Post a Comment