Wednesday 27 April 2011

பாட்டுச் சொல்லி பாட சொல்லி - அழகி



 இசை : இளையராஜா  பாடல் : பழனிபாரதி
 குரல்கள் : சாதனா சர்கம்  வருடம் : 2001

பாட்டுச் சொல்லி பாட சொல்லி குங்குமம் வந்ததம்மா
கேட்டுக் கொள்ள கிட்டவந்து மங்களம் தந்ததம்மா
குங்குமமும் மங்களமும் ஒட்டிவந்த ரெட்டைக் குழந்தையடி..
சந்தனத்து சிந்து ஒன்று கட்டிக் கொண்டு மெட்டொன்று தந்ததடி....

( பாட்டுச் சொல்லி...

இளமையிலே கனவுகளில் மிதந்து சென்றேன்
தனிமையிலே அலையடித்து ஒதுங்கி வந்தேன்
வானவில்லின் வரவுதனை யாரறிவார்...
வாழ்க்கை செல்லும் பாதைதனை யாருரைப்பார்
இருள் தொடங்கிடும் மேற்கு அங்கு இன்னும் இருப்பது எதற்கு
ஒளி தொடங்கிடும் கிழக்கு உண்டு பொதுவினில் ஒரு விளக்கு
ஒளி இருக்குமிடம் கிழக்குமில்லை மேற்குமில்லை

( பாட்டுச் சொல்லி...

புதிய இசைக் கதவு இன்று திறந்ததம்மா
செவி உணர இசையை மனம் உணர்ந்ததம்மா
இடம் கொடுத்த தெய்வமதை அறிந்து கொண்டேன்
வாழ்த்தியதை வணங்கி நின்றே வாழ்ந்திடுவேன்
அன்று சென்ற இளம்பருவம் அது எண்ண எண்ண மனம் நிறையும்
அன்று இழந்தது மீண்டும் எந்தன் கையில் கிடைத்தது வரமே
அதை கைப்பிடித்தே தொடர்ந்து செல்வேன் கலக்கமில்லை

( பாட்டுச் சொல்லி...

No comments: