இசை : இளையராஜா | பாடல் : கவிஞர் வாலி |
குரல்கள் : இளையராஜா | வருடம் : 1983 |
நானாக நானில்லை தாயே
நல்வாழ்வு தந்தாயே நீயே
நானாக நானில்லை தாயே
நல்வாழ்வு தந்தாயே நீயே
பாசம் ஒரு நேசம்
பாசம் ஒரு நேசம்
கண்ணாரக் கண்டான் உன்சேயே
( நானாக நானில்லை...
கீழ் வானிலே ஒளி வந்தது
கூட்டை விட்டு கிளி வந்தது
நான் பார்க்கும் ஆகாயம் எங்கும் நீ பாடும் பூபாளம்
நான் பார்க்கும் ஆகாயம் எங்கும் நீ பாடும் பூபாளம்
வாடும் பயிர் வாழ நீ தானே நீர் வார்த்த கார்மேகம்
( நானாக நானில்லை...
மணி மாளிகை மாடங்களும்
மலர் தூவிய மஞ்சங்களும்
தாய் வீடு போலில்லை அங்கு தாலாட்ட ஆளில்லை
தாய் வீடு போலில்லை அங்கு தாலாட்ட ஆளில்லை
கோயில் தொழும் தெய்வம் நீயின்றி நான் காண வேறில்லை
( நானாக நானில்லை...
No comments:
Post a Comment