இசை : ஏ.ஆர்.ரகுமான் | பாடல் : வைரமுத்து |
குரல்கள் : ஸ்வர்ணலதா | வருடம் : 2000 |
எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்
தவம் போல் இருந்து யோசிக்கிறேன்
அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்
( எவனோ ஒருவன்…
கேட்டு கேட்டு நான் கிறங்குகிறேன்
கேட்பதை அவனோ அறியவில்லை
காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே
அவன் ஊதும் ரகசியம் புறியவில்லை
( எவனோ ஒருவன்…
புல்லாங்குழலே பூங்குழலே நீயும் நானும் ஒரு ஜாதி
புல்லாங்குழலே பூங்குழலே நீயும் நானும் ஒரு ஜாதி
உள்ளே உறங்கும் ஏக்கத்திலே உனக்கும் எனக்கும் சரிபாதி
கண்களை வருடும் தேனிசையில் என்
காலம் கவலை மறந்திருப்பேன்
இன்னிசை மட்டும் இல்லையென்றால் - நான்
என்றோ என்றோ இறந்திருப்பேன்
( எவனோ ஒருவன்…
உறக்கம் இல்லா முன்னிரவில் என் உள்மனதில் ஒரு மாறுதலா
உறக்கம் இல்லா முன்னிரவில் என் உள்மனதில் ஒரு மாறுதலா
இரக்கம் இல்லா இரவுகளில் இது எவனோ அனுப்பும் ஆறுதலா
எந்தம் சோகம் தீர்வதற்கு
இது போல் மருந்து பிறிதில்லையே
அந்தக் குழலைப் போல் அழுவதற்கு
அத்தனை கண்கள் எனக்கில்லையே
( எவனோ ஒருவன்…
No comments:
Post a Comment