Saturday 30 April 2011

காதல் வெண்ணிலா கையில் - வானத்தைப் போல



 இசை : எஸ்.ஏ. ராஜ்குமார்  பாடல் : பா.விஜய்
 குரல்கள் : ஹரிஹரன்  வருடம் : 2000

காதல் வெண்ணிலா கையில் சேருமா
சொல்லு பூங்காற்றே நீ சொல்லு பூங்காற்றே
இமையாக நானும் இருப்பேன்
இமைக்காமல் பார்த்து ரசிப்பேன்
பல ஜென்மம் நான் எடுப்பேன்
உனக்காக காத்திருப்பேன்

( காதல் வெண்ணிலா…

வானத்து நிலவாய் நீ இருந்தால்
உனக்கு பதில் நான் தேய்ந்திடுவேன்
தீபத்தை போலே நீ இருந்தால்
உனக்கு பதில் நான் உருகிடுவேன்
பூவனம் போலே நீ இருந்தால்
பூவுக்கு பதில் நான் உதிர்ந்திடுவேன்
சொல்லு பூங்காற்றே
நீ சொல்லு பூங்காற்றே

( காதல் வெண்ணிலா…

ஓவியம் போல் உன்னை வரைந்திடவே
உதிரம் கொண்டு நிறமெடுப்பேன்
சிலையென உன்னை செதுக்கிடவே
இமைகள் என்னும் உளியெடுப்பேன்
கவிதையைப் போல் உன்னை எழுதிடவே
உயிருக்குள் இருந்து சொல் எடுப்பேன்
சொல்லு பூங்காற்றே
நீ சொல்லு பூங்காற்றே

( காதல் வெண்ணிலா…

No comments: