Sunday 10 April 2011

சோலை புஷ்பங்களே - இங்கேயும் ஒரு கங்கை



 இசை : இளையராஜா கங்கை அமரன்  பாடல் : வைரமுத்து
 குரல்கள் : கங்கை அமரன்-சுசீலா  வருடம் : 1984

சோலை புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்
கண்ணாளனை கண்டாலென்ன என் வேதனை சொன்னாலென்ன
நல் வார்த்தைகள் தந்தாலென்ன

( சோலை புஷ்பங்களே...

கண்ணா ஜோடிக்குயில் மாலையிடுமா இல்லை ஓடி விடுமா
கண்ணே நானிருக்க சோகம் என்னம்மா கங்கை வற்றி விடுமா
உன்னை எண்ணி மூச்சிருக்குது
உள்ளூரில் என்னென்னமோ பேச்சிருக்குது
உன்னை எண்ணி மூச்சிருக்குது
உள்ளூரில் என்னென்னமோ பேச்சிருக்குது
கல்யாணமா கச்சேரியா தாளாதது நெஞ்சு
கொக்கு ஒன்னு காத்திருக்குது
தண்ணீரில் தத்தளித்து மீனிருக்குது

( சோலை புஷ்பங்களே...

உன்னை மீறி ஒரு மாலை வருமா சொந்தம் மாறி விடுமா
உள்ளம் காத்திருந்து இற்று விடுமா தன்னை விற்று விடுமா
பால் வடியும் பூ முகத்திலே என் அன்பே
நீர் வடிய நான் பொறுக்கையிலே
பால் வடியும் பூ முகத்திலே என் அன்பே
நீர் வடிய நான் பொறுக்கையிலே
பன்னீருக்கும் மண்ணென்னைக்கும் கல்யாணமாம் சாமி
காவலுக்கு நாதி இல்லையா
என்னாளும் காதலுக்கு நீதி இல்லையா

( சோலை புஷ்பங்களே...

No comments: