இசை : இளையராஜா | பாடல் : |
குரல்கள் : ஹரிஹரன் | வருடம் : 2003 |
நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது
நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது
கண்மணியே ஓ கண்மணியே..
கண்ணுக்குள் கண்ணாக என்றென்றும்
நீ வேண்டும் என்னுயிரே ஓ.... என் உயிரே..
(நீ தூங்கும்...
பூ ஒன்று உன் மீது விழுந்தாலும் தாங்காது
என் நெஞ்சம் புண்ணாய் போகுமே ஓஓ..
நீ தூங்கும் ஓ..கண்மணியே..ஆரிரோ..ஆரிரோ..ஆரிரோ..
ஆரிரோ..ஆரிரோ..ஆரிரோ..ஆரிரோ..ஆரிரோ..ஆரிரோ..
மடி மீது நீ இருந்தால்
சொர்க்கங்கள் உண்மை என்று ஆகாதோ
நொடி நேரம் பிரிந்தாலும்
காலங்களும் நின்று போகாதோ
ஒரு மூச்சில் இரு தேகம்
வாழ்வது நாமன்றி வேறாரோ
நம் காதல் வெள்ளத்தில்
நடுவே நாம் இருந்தாலும்
என் நெஞ்சம் தாகம் கொள்ளுதே ஓஓ
(நீ தூங்கும்...
கண்ணோடும் நெஞ்சோடும்
உயிரால் உன்னை மூடிக் கொண்டேனே
கனவோடும் நினைவோடும்
நீங்காமல் உன்னருகில் வாழ்ந்தேனே
மதி பறிக்கும் மதிமுகமே
உன் ஒளி அலை தன்னில் நான் இருப்பேனே
எங்கே நீ சென்றாலும்
அங்கே நான் வருவேனே
மனசெல்லாம் நீ தான் நீ தானே.. ஓ..ஓ...
No comments:
Post a Comment