Tuesday 12 April 2011

நினைத்து நினைத்து - 7ஜி ரெயின்போ காலனி



 இசை : யுவன்ஷங்கர் ராஜா  பாடல் : நா.முத்துகுமார்
 குரல்கள் : கே.கே  வருடம் : 2004

நினைத்து நினைத்து பார்த்தேன்
நெருங்கி விலகி நடந்தேன்
உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓ...
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்
எடுத்துப்படித்து முடிக்கும் முன்னே
எரியும் கடிதம் எதற்கு பெண்ணே...
உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓ...
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்

அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்
உன்னைக் கேட்கும் எப்படி சொல்லுவேன்
உதிர்ந்து போன மலர்களின் மௌனமா...
தூது பேசும் கொலுசின் ஒலியை
அறைகள் கேட்கும் எப்படி சொல்லுவேன்
உடைந்து போன வளையலின் பேசுமா...
உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும் விரல்கள் இன்று எங்கே
தோளில் சாய்ந்து கதைகள் பேச முகமும் இல்லை இங்கே
முதல் கனவு முடிந்திடும் முன்னேமே தூக்கம் கலைந்ததே...

( நினைத்து நினைத்து...

பேசிப் போன வார்த்தைகள் எல்லாம்
காலம் தோறும் காதினில் கேட்கும்
சாம்பல் கரையும் வார்த்தை கரையுமா...
பார்த்துப் போன பார்வைகள் எல்லாம்
பகலும் இரவும் கேள்விகள் கேட்கும்
உயிரும் போகும் உருவம் போகுமா...
தொடந்து வந்த நிழலும் இங்கே தீயில் சேர்ந்து போகும்
திருட்டுப் போன தடயம் பார்த்தும் நம்பவில்லை நானும்
ஒரு தருணம் எதிரில் தோன்றுவாய் என்றே வாழ்கிறேன்

( நினைத்து நினைத்து ...

No comments: