Wednesday 13 April 2011

பூங்காற்றிலே உன் - உயிரே



 இசை : ஏ.ஆர்.ரகுமான்  பாடல் : வைரமுத்து
 குரல்கள் : உன்னிமேனன்-ஸ்வர்ணலதா  வருடம் : 1998

ஓ.. கண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை…
கண்ணில் ஒரு வலியிருந்தால்.. கனவுகள் வருவதில்லை…
கண்ணில் ஒரு வலியிருந்தால்... கனவுகள் வருவதில்லை…

பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாக தேடிப் பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே
அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்
உயிரின் துளி காயும் முன்னே
என் விழி உனை காணும் கண்ணே
என் ஜீவன் ஓயும் முன்னே
ஓடோடி வா..

( பூங்காற்றிலே உன்...

காற்றின் அலை வரிசை கேட்கின்றதா
கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும்
கண்ணீர் வழிகின்றதா நெஞ்சு நனைகின்றதா
இதயம் கருகும் ஒரு வாசம் வருகின்றதா
காற்றில் கண்ணீரை ஏற்றி
கவிதைச் செந்தனை ஊற்றி
கண்ணே உன் வாசல் சேர்த்தேன்
ஓயும் ஜீவன் ஓடும் முன்னே ஓடோடி வா...

( பூங்காற்றிலே உன்...

( கண்ணில் ஒரு வலி...
( கண்ணில் ஒரு வலி...

வானம் எங்கும் உன் பிம்பம்
ஆனால் கையில் சேரவில்லை
காற்றில் எங்கும் உன் வாசம்
வெறும் வாசம் வாழ்க்கையில்லை
உயிரை வேரோடு கிள்ளி
என்னைச் செந்தீயில் தள்ளி
எங்கே சென்றாயோ கள்ளி
ஓயும் ஜீவன் ஒடும் முன்னே ஓடோடி வா..

( பூங்காற்றிலே உன்...

No comments: