Sunday 1 May 2011

ஆகாய வெண்ணிலாவே - அரங்கேற்ற வேளை



 இசை : இளையராஜா  பாடல் : கவிஞர் வாலி
 குரல்கள் : கே.ஜே.ஜேசுதாஸ் - உமா ரமணன்  வருடம் : 1990

ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ
ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ
மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட
உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட

( ஆகாய வெண்ணிலாவே...

தேவார சந்தம் கொண்டு தினம் பாடும் தென்றல் ஒன்று
பூவாரம் சூடிக்கொண்டு தலைவாசல் வந்ததின்று

தென்பாண்டி மன்னன் என்று திருமேனி வண்ணம் கண்டு
மடியேறி வாழும் பெண்மை படியேறி வந்ததின்று

இளநீரும் பாலும் தேனும் இதழோரம் வாங்க வேண்டும்

கொடுத்தாலும் காதல் தாபம் குறையாமல் ஏங்க வேண்டும்

கடல் போன்ற ஆசையில் மடல்வாழை மேனிதான் ஆட

நடு ஜாம வேளையில் நெடுநேரம் நெஞ்சமே கூட

( ஆகாய வெண்ணிலாவே...


தேவாதி தேவர் கூட்டம் துதி பாடும் தெய்வ ரூபம்
பாதாதி கேசமெங்கும் ஒளி வீசும் கோவில் தீபம்

வாடாத பாரிஜாதம் நடை போடும் வண்ண பாதம்
கேளாத வேணு கானம் கிளி பேச்சில் கூட்டக் கூடும்

அடியாளின் ஜீவன் ஏறி அதிகாரம் செய்வதென்ன

அலங்கார தேவதேவி அவதாரம் செய்ததென்ன

இசைவீணை வாடுதோ இதமான கைகளே மீட்ட

சுதியோடு சேருமோ சுகமான ராகமே காட்ட

( ஆகாய வெண்ணிலாவே...

No comments: