Wednesday 11 May 2011

கற்பூர பொம்மை ஒன்று – கேளடி கண்மணி



 இசை : இளையராஜா  பாடல் : மேத்தா
 குரல்கள் : பி.சுசீலா  வருடம் : 1990

கற்பூர பொம்மை ஒன்று கைவீசும் தென்றல் ஒன்று
கற்பூர பொம்மை ஒன்று கைவீசும் தென்றல் ஒன்று
கலந்தாட கைகோர்க்கும் நேரம்
கண்ணோரம் ஆனந்த ஈரம்
முத்தே என் முத்தாரமே சபையேறும் பாடல்
நீ பாடம்மா நீ பாடம்மா

( கற்பூர பொம்மை...

பூந்தேரிலே நீ ஆடவே
உண்டான அன்பே ஒரு ராஜாங்கம்
ராஜாங்கமே ஆனந்தமே நம்வீடு இங்கே ஒரு சங்கீதம்
மானே உன் வார்த்தை ரீங்காரம்
மலரே என் நெஞ்சில் என்றும் நின்றாடும்
முத்தே என் முத்தாரமே சபையேரும் பாடல்
நீ பாடம்மா நீ பாடம்மா

( கற்பூர பொம்மை...

தாயன்பிற்கே ஈடேதம்மா
ஆகாயம் அட அது போதாது
தாய் போல யார் வந்தாலுமே
உன் தாயைப்போலே அது ஆகாது
என் மூச்சில் வாழும் புல்லாங்குழல்
உன் பேச்சு நாளும் செந்தேன்குழல்
முத்தே என் முத்தாரமே சபையேரும் பாடல்
நீ பாடம்மா நீ பாடம்மா

( கற்பூர பொம்மை...

No comments: