இசை : இளையராஜா | பாடல் : ஆர்.வி.உதயகுமார் |
குரல்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம் - சுசீலா | வருடம் : 1992 |
முத்து மணி மாலை
உன்ன தொட்டு தொட்டு தாலாட்ட
வெட்கத்திலே சேலை
கொஞ்சம் விட்டு விட்டு போராட
உள்ளத்திலே நீ தானே
உத்தமி உன் பேர் தானே
ஒரு நந்தவன பூ தானே
புது சந்தனமும் நீ தானே
முத்து மணி மாலை
உன்ன தொட்டு தொட்டு தாலாட்ட
கொலுசு தான் மௌனமாகுமா மனசு தான் பேசுமா
மேகம் தான் நிலவு மூடுமா மவுசு தான் குறையுமா
நேசப்பட்டு வந்த பாசக் கொடிக்கு
காசி பட்டு தந்த ராசாவே
வாக்கப் பட்டு வந்த வாசமலரே
வண்ணம் கலையாத ரோசாவே
தாழம் பூவுல வீசும் காத்துல
பாசம் தேடி மாமா வா
முத்து மணி மாலை
என்ன தொட்டு தொட்டு தாலாட்ட
வெட்கத்திலே சேலை
கொஞ்சம் விட்டு விட்டு போராட
காலிலே போட்ட மிஞ்சி தான் காதுல பேசுதே
கழுத்துல போட்ட தாலிதான் காவியம் பாசுதே
நெத்திச்சுட்டி ஆடும் உச்சந்தலையில்
பொட்டு வெச்சதாரு நாந்தானே
அத்தி மரப்பூவும் அச்சப்படுமா
பக்கத்துணையாரு நீதானே
ஆசை பேச்சுல பாதி மூச்சிலே
லேசா தேகம் சூடேர
( முத்து மணி மாலை
No comments:
Post a Comment