Sunday 1 May 2011

என்னைத் தாலாட்டும் - உன்னை நினைத்து



 இசை : சிற்பி  பாடல் :
 குரல்கள் : உன்னிமேனன் - சுஜாதா  வருடம் : 2002

என்னைத் தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா
உன்னை சீராட்டும் பொன் ஊஞ்சல் நான் அல்லவா
உன்னை மழை என்பதா இல்லை தீ என்பதா
அந்த ஆகாயம் நிலம் காற்று நீ என்பதா
உன்னை நான் என்பதா

( என்னைத் தாலாட்டும்...

நதியாகா நீயும் இருந்தாலே நானும்
நீயிருக்கும் தூரம் வரை கரையாகிறேன்
இரவாக நீயும் நிலவாக நானும்
நீயிருக்கும் நேரம் வரை உயிர் வாழ்கிறேன்
முதல் நாள் என் மனதில் விதையாய் நீ இருந்தாய்
மறுநாள் பார்க்கையிலே வனமாய் மாறிவிட்டாய்
நாடி துடிப்போடு நடமாடி நீ வாழ்கிறாய்
நெஞ்சில் நீ வாழ்கிறாய்

( என்னைத் தாலாட்டும்...

பூலோகம் ஓர் நாள் காற்றின்றி போனால்
எந்தன் உயிர் உந்தன் மூச்சு காற்றாகுமே
ஆகாயம் ஓர் நாள் விடியாமல் போனால்
எந்தன் ஜீவன் உந்தன் ககியில் விளக்காகுமே
அன்பே நான் இருந்தேன் வெள்ளைக் காகிதமாய்
என்னில் நீ வந்தாய் பேசும் ஓவியமாய்
தீபம் நீயென்றால் அதில் நானே திரியாகிறேன்
தினம் திரியாகிறேன்

( என்னைத் தாலாட்டும்...

No comments: