Friday 19 August 2011

என்ன புள்ள செஞ்ச நீ - ரா‌மன்‌ தே‌டி‌ய சீ‌தை‌‌



 இசை : வித்யாசாகர்  பாடல் : நெல்லை ஜெயந்தா
 குரல்கள் : வித்யாசாகர்  வருடம் : 2008


என்ன புள்ள செஞ்ச நீ ஹோய்...
பாவிப்பய நெஞ்ச நீ
என்ன புள்ள செஞ்ச நீ ஹோய்...
பாவிப்பய நெஞ்ச நீ
பார்கையில சொக்க வெச்ச
பறக்கத்தான் ரெக்க வெச்ச
திக்க வெச்ச திணற வெச்ச
திசையத்தான் உணர வெச்ச
தெக்க வெச்ச வள்ளுவனா ஒத்தையில
நிக்க வெச்ச

( என்ன புள்ள செஞ்ச நீ...

கொள்ளைக்காரன் நானே கொள்ளையாகி போனேன்
ஏய் மிச்சம்மீதி ஏதுமில்ல எல்லாம் தொலச்சேனே
தேதி போல நாளும் தேஞ்சுபோகும் தேகம்
நாளும் தேஞ்சபோதும் வளருதே காதல் தேயாம
தண்ணீரில் உண்டாகும் மீன்கள் - ஏய்
தண்ணீரில் வேகின்ற மாயம்
உன்னால வாழ்கின்ற நெஞ்சம் - ஏய்
உன்னால ஏனிந்த காயம்
என் வாழ்க்கையே நீ வந்துதான் ஆரம்பமே ஆகும்

( என்ன புள்ள செஞ்ச நீ...


ஒன்ன பார்த்த வேளை உடம்பும் செங்கச்சூள - ஏய்
தெம்பரப்பு அருவியா நீயே வந்தாயே
பாத மண்ணை பிசஞ்சு பானை போல வளஞ்சேன் - ஏய்
இன்று நீயே என்னிடமே மாத்தி தந்தாயே
எப்போதும் ஒம்பேரச் சொல்லி
என் உள்நாக்கும் தண்டோரா போடும்
உப்பாத்தில் மீனாகத்தானே - ஏய்
அப்போதும் உன் பிம்பம் ஆடும்
என் வாழ்க்கையே நீ வந்துதான் ஆரம்பமே ஆகும்

( என்ன புள்ள செஞ்ச நீ...


No comments: