Sunday 30 October 2011

முன்னந்தி சாரல் நீ - 7 ஆம் அறிவு



 இசை : ஹாரிஸ் ஜெயராஜ்  பாடல் : நா.முத்துகுமார்
 குரல்கள் : கார்த்திக் - மேகா  வருடம் : 2011

முன்னந்தி சாரல் நீ
முன்ஜென்ம தேடல் நீ
நான் தூங்கும் நேரத்தில்
தொலை தூரத்தில் வரும் பாடல் நீ
பூ பூத்த சாலை நீ
புலராத காலை நீ
விடிந்தாலும் தூக்கத்தில்
விழியோரத்தில் வரும் கனவு நீ
ஹே..ஹே...பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே
உந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
தன்னால் உள்ளே உள்ளே உருகுது நெஞ்சமே
வா வா பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே
எந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
வந்தால் இன்பம் சொல்ல வார்த்தைகள் கொஞ்சமே

( முன்னந்தி சாரல் நீ...

ஓ... அழகே ஓ... இமையழகே
ஏ... கலைந்தாலும் உந்தன் கூந்தல் ஓரழகே...
விழுந்தாலும் உந்தன் நிழலும் பேரழகே...
அடி உன்னைத் தீண்டத்தானே
மேகம் தாகம் கொண்டு மழையாய் தூவாதோ
வந்து உன்னைத் தொட்ட பின்பு
தாகம் தீர்ந்ததென்று கடலில் சேராதோ....
ஹே..ஹே...பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே
உந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
தன்னால் உள்ளே உள்ளே உருகுது நெஞ்சமே
ஓ..ஓ... வா வா பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே
எந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
வந்தால் இன்பம் சொல்ல வார்த்தைகள் கொஞ்சமே


அதிகாலை ஓ... அந்திமாலை
ம்... உனைத்தேடிப் பார்க்க சொல்லி போராடும்
உனைக்கண்ட பின்பே எந்தன் நாள் ஓடும்
பெண்ணே பம்பரத்தை போலே
என்னை சுற்ற வைத்தாய் எங்கும் நில்லாமல்
தினம் அந்தரத்தின் மேலே
என்னைத் தொங்க வைத்தாய் காதல் சொல்லாமல்
ஹே..ஹே...பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே
உந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
தன்னால் உள்ளே உள்ளே உருகுது நெஞ்சமே
வா வா பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே
எந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
வந்தால் இன்பம் சொல்ல வார்த்தைகள் கொஞ்சமே

( முன்னந்தி சாரல் நீ...

1 comment:

தமிழ்வாசி பிரகாஷ் said...

வரிகளுடன் பாடலை கேட்கும் போது நன்றாக உள்ளது.