இசை : இளையராஜா | பாடல் : கவிஞர் வாலி |
குரல்கள் : சுனந்தா | வருடம் : 1993 |
மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா - நீ
புன்னகை சிந்திடும் சிங்கார கண்ணன் அல்லவா
மழலைகள் யாவும் தேனோ மரகத வீணை தானோ
மடிமேலே ஆடும் பூந்தேரோ ..
அன்னை மனம்தான் பாடும் ஆராரோ…
( மன்னவா மன்னவா...
நாள்தோறும் காவல் நின்று நமை காக்கும் தந்தை உண்டு
இந்த வாழ்வு என்பது அந்த தெய்வம் தந்தது
ராஜாதி ராஜன் இன்று பலதேசம் நீயும் வென்று
வரவேண்டும் கண்மணி வெற்றிவேலின் பிள்ளை நீ
தென்மதுரை சீமையெல்லாம் அரசாளும் உன்னைக் கண்டு
திருத்தோளில் மாலைசூடும் மகராணி யாரோ இங்கு
ஒளிவிடும் எதிர்காலம் ஒன்று
உருவாகும் நாளை இங்கு
பனிவாய் மலரே மடிமேல் உறங்கு...
( மன்னவா மன்னவா …
மீனாட்சி கையில் கொண்டு அருள்கூறும் கிள்ளை ஒன்று
உருமாறி நின்றதோ எந்தன் மகனாய் வந்ததோ
காமாட்சி கோயில் கண்டு சுடர் வீசும் தீபம் ஒன்று
எந்தன் வீடு வந்ததோ பிள்ளை வடிவாய் நின்றதோ
உன்னை ஒரு ஈயும் மொய்த்தால் உருகாதா தாயின் சித்தம்
விழியோரம் நீரைக் கண்டால் கொதிக்காதா அன்னை ரத்தம்
உனக்கொரு குறை நேர்ந்திடாது
வளர்ப்பேனே தோளின் மீது
பனிவாய் மலரே மடிமேல் உறங்கு…
( மன்னவா மன்னவா …
No comments:
Post a Comment