இசை : ஏ.ஆர்.ரகுமான் | பாடல் : |
குரல்கள் : உன்னிகிருஷ்ணன் - மனோ | வருடம் : 1996 |
தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு
தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு
கரையின் மடியில் நதியும் தூங்கும்
கவலை மறந்து நீ தூங்கு
இரவின் மடியில் உலகம் தூங்கும்
இனிய கனவில் தூங்கு
( தென்றலே தென்றலே...
காதல் என்றால் கவலையா
கண்ணில் நீரின் திவலையா
நோயானேன் உயிரும் நீயானேன்
இரவில் காயும் முழுநிலா
எனக்கு மட்டும் சுடும்நிலா
வாராயோ எனை நீ சேராயோ
தூங்கவைக்கும் நிலவே
தூக்கமின்றி நீ ஏன் வாடினாயோ...
( தென்றலே தென்றலே...
மாலைவானில் கதிரும் தூங்கும்
மடியில் சாய்ந்து தூங்கு
பூமியாவும் தூங்கும் போது
பூவை நீயும் தூங்கடா
மலரின் காதல் பனிக்குத் தெரியும் – என்
மனதின் காதல் தெரியுமா
சொல்ல வார்த்தைக் கோடிதான் – உனை
நேரில் கண்டால் மௌனமேன்
தூங்கவைக்கப் பாடினேன் – நான்
தூக்கமின்றி வாடினேன்
( தென்றலே தென்றலே...
No comments:
Post a Comment