Wednesday 12 August 2015

தாயின் மணிக்கொடி - ஜெய் ஹிந்த்



இசை : வித்யாசாகர் பாடல் : வைரமுத்து
குரல்கள் : எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வருடம் : 1994


ஜெய்ஹிந்த்! ஜெய்ஹிந்த்! ஜெய்ஹிந்த்!
ஜெய்ஹிந்த்! ஜெய்ஹிந்த்!
ஜெய்ஹிந்த்! ஜெய்ஹிந்த்!
ஜெய்ஹிந்த்! ஜெய்ஹிந்த்!
ஜெய்ஹிந்த்! ஜெய்ஹிந்த்!

தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி
சொல்லுது ஜெய்ஹிந்த்!
தாயகம் காத்திட தன்னலம் போக்கிட
சொல்லுக ஜெய்ஹிந்த் - என்
இந்திய தேசம் இது - ரத்தம்
சிந்திய தேசமிது
காந்தி மகான் வந்த கண்ணிய பூமி இது...

தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி
சொல்லுது ஜெய்ஹிந்த்!
தாயகம் காத்திட தன்னலம் போக்கிட
சொல்லுக ஜெய்ஹிந்த்!!

ஜெய்ஹிந்த்...ஜெய்ஹிந்த்

வண்ணம் பல வண்ணம் நம் எண்ணம் ஒன்றல்லோ !
பறவைகள் பலவன்றோ வானம் ஒன்றன்றோ !!
தேகம் பலவாகும் நம் ரத்தம் ஒன்றல்லோ !
பாஷைகள் பலவன்றோ தேசம் ஒன்றன்றோ !!
பூக்கள் கொண்டு வந்தால் இது புண்ணிய தேசமடா !
வாட்கள் கொண்டு வந்தால் தலை வாங்கிடும் தேசமடா !!
எங்கள் ரத்தம் எங்கள் கண்ணீர்
இவை இரண்டும் கலந்ததெங்கள் சரிதமே!
இது தீயில் எழுந்து வந்த தேசமே !!

தலை கொடுத்தார் அந்த அனைவருக்கும்
தாயகமே எங்கள் முதல் வணக்கம்

தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி
சொல்லுது ஜெய்ஹிந்த் !
தாயகம் காத்திட தன்னலம் போக்கிட
சொல்லுக ஜெய்ஹிந்த் !!

சட்டம் நம் சட்டம் புது வேகம் கொள்ளாதோ ?
வேகமிருந்தால்தான் வெற்றிகள் உண்டாகும் !!
மண்ணில் நம் மண்ணில் புது சக்தி பிறக்காதோ ?
சக்தியிருந்தால்தான் சரித்திரம் உண்டாகும் !!
சட்டம் கையில் கொண்டு நீ தீமை திருத்திவிடு !
சரியாய் இல்லை என்றால் அதன் வேரை அறுத்துவிடு !!
புலி போல் எழுக; புயல் போல் விரைக - அட
இளைய ரத்தம் என்ன போலியா ?
எழுத வேண்டும் புதிய இந்தியா !!

சுதந்திரத்தைக் காத்த அனைவருக்கும்
சொல்லுகின்றோம் எங்கள் முதல் வணக்கம்

தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி
சொல்லுது ஜெய்ஹிந்த்
தாயகம் காத்திட தன்னலம் போக்கிட
சொல்லுக ஜெய்ஹிந்த் - என்
இந்திய தேசம் இது - ரத்தம்
சிந்திய தேசமிது
காந்தி மகான் வந்த கண்ணிய பூமி இது

ஜெய்ஹிந்த்... ஜெய்ஹிந்த்...
ஜெய்ஹிந்த்... ஜெய்ஹிந்த்...
ஜெய்ஹிந்த்... ஜெய்ஹிந்த்...
ஜெய்ஹிந்த்... ஜெய்ஹிந்த்...



No comments: