| இசை : ஏ.ஆர்.ரகுமான் | பாடல் : |
| குரல்கள் : சித்ரா | வருடம் : 1994 |
அழகு நிலவே கதவு திறந்து அருகில் வந்தாயே
எனது கனவை உனது விழியில் எடுத்து வந்தாயே
ஒரு பாலைவனமாய் கிடந்த வயிற்றில் பாலைவார்த்தாயே
என் பாதிஉயிரை திருப்பித் தரவே பறந்து வந்தாயே
இந்த பாவி உன்னைச் சுமந்ததில்லை நானும் உன் தாயே...
( அழகு நிலவே கதவு...
சொந்தங்கள் என்பது தாய் தந்தது - இந்த
பந்தங்கள் என்பது யார் தந்தது
இன்னொரு தாய்மைதான் நான் கண்டது - அட
உன்விழி ஏனடா நீர் கொண்டது
அன்புதான் தியாகமே அழுகைதான் தியானமே
உனக்கும் எனக்கும் உள்ள உறவு ஊருக்குப் புரியாதே...
( அழகு நிலவே கதவு...
பூமியை நேசிக்கும் வேர்போலவே - உன்
பூமுகம் நேசித்தேன் தாயாகவே
நீருக்குள் சுவாசிக்கும் மீன்போலவே - உன்
நேசத்தில் வாழுவேன் நானாகவே
உலகம் மாறுமே உறவுகள் வாழுமே
கடலைவிடவும் ஆழம் எந்தன் கண்ணீர்த்துளி ஒன்றே...
( அழகு நிலவே கதவு...
No comments:
Post a Comment