Thursday, 21 February 2019

உயிரே உன்னை தமிழ் என்பதா - எல்.கே.ஜி.



இசை : லியோன் ஜேம்ஸ் பாடல் : பா.விஜய்
குரல்கள் : சித் ஸ்ரீராம் வருடம் : 2019


உயிரே உன்னை தமிழ் என்பதா ?
தமிழே உன்னை உயிர் என்பதா ??
இசையில் மெய் மறந்தாய் !
எழுத்தில் உயிர்மெய் கலந்தாய் !!
குமரி கண்டம் முதல் அண்டம் வரை நீதான் நிறைந்தாய் !!!
பேசத்தானே ஆசை முளைக்கும் !
பேசிப் பார்த்தால் மீசை முளைக்கும் !!
தொல்காப்பியரின் கைகளிலே தமிழே கணினி...
உயிர் எழுத்தினிலே ஆயுதத்தை ஏந்தும் மொழி நீ...

தமிழ் மகனே வாடா...
தலை நிமிர்ந்து வாடா...
தமிழ் மகளே வா வா...
தரணி வெல்ல வா வா...

தமிழ் மகனே வாடா...
துணிவோடு வாடா...
துயர் தீர்க்க வாடா...
தலை நிமிர்ந்து வாடா...
பணிவோடு வாடா...
படைகொண்டு வாடா...

தமிழ் மகளே வா வா...
துணிவோடு வாடா...
துயர் தீர்க்க வாடா...
தரணி வெல்ல வா வா...
பணிவோடு வாடா...
படைகொண்டு வாடா...


"நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
தமிழணங்கே!

உன் சீரிளமைத் திறம்வியந்து
செயல்மறந்து வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!!
வாழ்த்துதுமே!!!"


ஈராயிரம் ஆண்டாகியும் தமிழ் தரணியை ஆளும்
இதை உலகெங்கிலும் பறைசாற்றிய உயர் இனம் எங்கள் ஈழம்

கல்லணையில் பட்ட காற்றும்
காவிரியில் கொடியேற்றும்
ஓலைச்சுவடிக்குள் உள்ள அறிவியல் பார் போற்றும்

சிங்க இனம் என்றும் சீறும்
ஜல்லிக்கட்டு சொன்ன வீரம்
வீரம் மட்டுமல்ல காதல் சொல்ல சொல்ல தேன் ஊறும்

இமயம் அதன் முடியில் பெயர் எழுதிய தமிழன்
உலகில் எந்த உயிர்க்கும் சென்று உதவிடும் மனிதன்
தமிழன்...
தமிழன்...
தமிழன்...
தமிழன்...

தமிழ் மகனே வாடா...
துணிவோடு வாடா...
துயர் தீர்க்க வாடா...
தலை நிமிர்ந்து வாடா...
பணிவோடு வாடா...
படைகொண்டு வாடா...

தமிழ் மகளே வா வா...
துணிவோடு வாடா...
துயர் தீர்க்க வாடா...
தரணி வெல்ல வா வா...
பணிவோடு வாடா...
படைகொண்டு வாடா...

தமிழ் மகனே வாடா...
தலை நிமிர்ந்து வாடா...
தமிழ் மகளே வா வா...
தரணி வெல்ல வா வா...

தமிழ் மகனே வாடா...
தலை நிமிர்ந்து வாடா...
தமிழ் மகளே வா வா...
தரணி வெல்ல வா வா...



No comments: