இசை : எஸ்.ஏ. ராஜ்குமார் | பாடல் : வைரமுத்து |
குரல்கள் : ஹரிஹரன் | வருடம் : 2001 |
பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று
நுரையீரல் தீண்டாமல் திரும்புது காற்று
நீ என்ற தூரம் வரை நீளாதோ எந்தன் குடை
நாம் என்ற நேரம் வரை தூவாதோ உந்தன் மழை
ஓடோடி வாராயோ அன்பே அன்பே அன்பே அன்பே...
அன்பே அன்பே அன்பே அன்பே...
( பிரிவொன்றை சந்தித்தேன் ...
ஒருவரி நீ ஒருவரி நான் திருக்குரளாம் உண்மை சொன்னேன்
தனித்தனியே பிரித்து வைத்தால் பொருள் தருமோ கவிதை இங்கே
உன்கைகள் என்பேனா துடைக்கின்ற கைக்குட்டை
நீ தொட்ட அடையாளம் அழிக்காது என் சட்டை
என்னை நானே தேடிப்போனேன்
பிரிவினாலே நீயே ஆனேன்
( பிரிவொன்றை சந்தித்தேன் ...
கீழிமை நான் மேலிமை நீ பிரிந்ததில்லை கண்ணே கண்ணே
மேலிமை நீ பிரிந்ததனால் புரிந்துகொண்டேன் காதல் என்றே
நாம் பிரிந்த நாளில்தான் நம்மை நான் உணர்ந்தேன்
நம் பிறந்தநாளில் தான் நம் காதல் திறந்தேனே
உள்ளம் எங்கும் நீயே நீயே
உயிரின் தாகம் காதல் தானே ...
( பிரிவொன்றை சந்தித்தேன் ...
No comments:
Post a Comment