Friday 4 March 2011

நீயா பேசியது என் அன்பே - திருமலை



 இசை : வித்யாசாகர்  பாடல் : யுகபாரதி
 குரல்கள் : சங்கர் மகாதேவன்  வருடம் : 2003

நீ என்பது எதுவரை எதுவரை
நான் என்பது எதுவரை எதுவரை
நாம் என்பதும் அதுவரை அதுவரைதான்
வாழ்வென்பது ஒருமுறை ஒருமுறை
சாவென்பது ஒருமுறை ஒருமுறைதான்
காதல் வரும் ஒருமுறை ஒருமுறைதான்

நீயா பேசியது என் அன்பே நீயா பேசியது
தீயை வீசியது என் அன்பே தீயை வீசியது
கண்களிலே உன் கண்களிலே பொய் காதல் நாடகம் ஏனடி
அன்பினிலே மெய் அன்பினிலே ஓர் ஊமைக்காதலன் நானடி ( நீயா...

ஒ... எதோ நானிருந்தேன் என்னுள்ளே காற்றாய் நீ நுழைந்தாய்
காற்றை மொழிபெயர்த்தேன் அன்பே சொல் மூச்சை ஏன் பறித்தாய்
இரவிங்கே பகலிங்கே தொடுவானம் போனதெங்கே ?
உடலிங்கே உயிரிங்கே தடுமாறும் ஆவி எங்கே ?
உருகினேன் நான் உருகினேன் - இன்று
உயிரில் பாதி கருகினேன்

( நீயா பேசியது...

வேரில் நான் அழுதேன் என் பூவும் சோகம் அறியவில்லை
வேஷம் தரிக்கவில்லை முன்னாளில் காதல் பழக்கமில்லை
உனக்கென்றே உயிர் கொண்டேன் அதில் ஏதும் மாற்றமில்லை
பிரிவென்றால் உறவுண்டு அதனாலே வாட்டமில்லை
மறைப்பதால் நீ மறைப்பதால் என் காதல் மாய்ந்து போகுமா ?

( நீயா பேசியது...

No comments: