Wednesday 16 March 2011

வெண்ணிலவே வெண்ணிலவே - காலமெல்லாம் காதல் வாழ்க



 இசை : தேவா  பாடல் :
 குரல்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்-ஸ்வர்ணலதா  வருடம் : 1997

வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா
என் நினைவில் உன் நினைவே சொர்க்கம் தனம்மா
வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா
என் நினைவில் உன் நினைவே சொர்க்கம் தனம்மா
சின்ன மூக்குத்திப் பூ வரும் முதல் சந்திப்பு
அந்த பாலாற்றில் நீராட வா...

வெண்ணிலவே வெண்ணிலவே வெள்ளிக் கோலமா
அத்தைமகன் ஆசையிலே தொட்ட நாணமா
சின்ன மூக்குத்திப் பூ வரும் முதல் சந்திப்பு
அந்த பாலாற்றில் நீராட வா...

வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா
என் நினைவில் உன் நினைவே சொர்க்கம் தனம்மா

வெள்ளிப்பனி மேகங்கள் செல்லும் ஊர்கோலங்கள்
அவள் பாதத்தில் எனை சேருங்கள்
அந்த மழை மேகங்கள் எந்தன் எதிர்காலங்கள்
காதல் தீவுக்கு வழி காட்டுங்கள்
நெஞ்சில் அலைமோதும் கடல் போல ஓசை
வந்து கரையேறும் அலைக்கென்ன ஆசை
இன்ப மயக்கமென்ன
சின்ன தயக்கமென்ன
இந்த காலங்கள் தவ கோலங்கள்...

வெண்ணிலவே வெண்ணிலவே வெள்ளிக் கோலமா
அத்தைமகன் ஆசையிலே தொட்ட நாணமா

ஒரு புல்லாங்குழல் பாடும் தனி ராகங்கள்
உந்தன் தேகத்தில் சுரம் பாடுமா
அந்த சுரம் பாடினால் தொட்டு சுகம் தேடினால்
கன்னி மாடத்தில் குளிர்காலமா
நித்தம் ஒருகோடி கனவோடு தூக்கம்
புத்தம் புதுபார்வை புரியாத ஏக்கம்
ரத்த நாளங்களில் போடும் தாளங்களில்
புது தாலட்டுதான் பாடுமா...

வெண்ணிலவே வெண்ணிலவே கரைந்தது ஏனம்மா
உன் நினைவில் என் நினைவே கலைந்தது ஏனம்மா
சின்ன மூக்குத்திப் பூ வரும் முதல் சந்திப்பு
அந்த பாலாற்றில் நீராட வா...

வெண்ணிலவே வெண்ணிலவே வெள்ளிக் கோலமா
அத்தைமகன் ஆசையிலே தொட்ட நாணமா

No comments: