இசை : ஜி.வி.பிரகாஷ் | பாடல் : நா.முத்துகுமார் |
குரல்கள் : ஆன்ட்ரியா-ஹரினி-ரூப் குமார் | வருடம் : 2010 |
பூக்கள் பூக்கும் தருணம் – ஆருயிரே
பார்த்ததாரும் இல்லையே
புலரும் காலைப் பொழுதை - முழுமதியும்
பிரிந்து போவதில்லையே
நேற்று வரை நேரம் போகவில்லையே
உனதருகே நேரம் போதவில்லையே
எதுவும் பேசவில்லை இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லை இது எதுவோ
இரவும் விடியவில்லையே – அது விடிந்தால்
பகலும் முடிவதில்லையே – பூந்தளிரே....
வார்த்தை தேவை இல்லை வாழும் காலம் வரை
பாவை பார்வை மொழி பேசுமே
நேற்று தேவை இல்லை நாளை தேவை இல்லை
இன்று இந்த நொடி போதுமே
வேரின்றி விதையின்றி விண்தூவும் மழையின்றி
இது என்ன இவன் தோட்டம் பூப்பூகுதே
வாளின்றி போரின்றி வலிக்கின்ற யுத்தமின்றி
இது என்ன இவனுக்குள் எனை வெல்லுதே
இதயம் முழுதும் இருக்கும் இந்த தயக்கம்
எங்கு கொண்டு நிறுத்தும்
இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம்
அது கிடைத்தால் சொல்லவேண்டும் எனக்கும் - பூந்தளிரே...
(பூக்கள் பூக்கும் தருணம் …
எந்த மேகம் இது எந்தன் வாசல் வந்து
எங்கும் இன்பமழை தூவுதே ...
என்ன உறவு இது எதுவும் புரியவில்லை
என்றபோதும் இது நீளுதே
யாரென்று அறியாமல் பேர்கூட தெரியாமல்
இவளோடு ஒரு சொந்தம் உருவானதே
ஏனென்று கேட்காமல் தடுத்தாலும் நிற்காமல்
இவன்போகும் வழியெங்கும் மனம் போகுதே
பாதை முடிந்த பிறகும் இந்த உலகில்
பயணம் முடிவதில்லையே
காற்றில் பறந்தே பறவை மறைந்த பிறகும்
கிளை தொடங்கும் நடனம் முடிவதில்லையே...
No comments:
Post a Comment