Wednesday 13 April 2011

அனல் மேலே பனித்துளி - வாரணம் ஆயிரம்



 இசை : ஹாரிஸ் ஜெயராஜ்  பாடல் : தாமரை
 குரல்கள் : சுதா ரகுநாதன்  வருடம் : 2008

அனல் மேலே பனித்துளி
அலைபாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழைத்துளி
இவை தானே இவள் இனி
இமை இரண்டும் தனித்தனி
உறக்கங்கள் உறைபனி
எதற்காக தடை இனி

( அனல் மேலே...

எந்த காற்றின் அலாவலில் மலர் இதழ்கள் விரிந்திடுமோ
எந்த தேவ வினாடியில் மன அறைகள் திறந்திடுமோ
ஒரு சிறுவலி இருந்ததுவே இதயத்திலே இதயத்திலே
உனதிருவிழி தடவியதால் அமிழ்ந்துவிட்டேன் மயக்கத்திலே
உதிரட்டுமே உடலின் திரை - அதுதான்
இனி நிலாவின் கறை கறை...

( அனல் மேலே...

சந்தித்தோமே கனாக்களில் சிலமுறையா பலமுறையா
அந்திவானில் உலாவினோம் அது உனக்கு நினைவில்லையா
இரு கரைகளை உடைத்திடவே பெருகிடுமா கடலலையே
இரு இரு உயிர் தத்தளிக்கையில் வழி சொல்லுமா கலங்கரையே
உயரலைகள் எனை அடிக்க - கரை
சேர்வதும் கனாவில் நிகழ்ந்திட

( அனல் மேலே...

No comments: