Thursday 14 April 2011

தூங்காத விழிகள் - அக்னிநட்சத்திரம்



 இசை : இளையராஜா  பாடல் : கவிஞர் வாலி
 குரல்கள் : ஜே.ஜேசுதாஸ்-ஜானகி  வருடம் : 1988

தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணைதேடும் நெஞ்சம் ஒன்று
செம்பூமஞ்சம் விரித்தாலும்
பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது
அன்பே நீ இல்லாது

( தூங்காத விழிகள்…

மாமர இலை மேலே... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...
மாமர இலை மேலே மார்கழி பனிப்போலே
பூமகள் மடி மீது நான் தூங்கவோ
மாமர இலை மேலே மார்கழி பனிப்போலே
பூமகள் மடி மீது நான் தூங்கவோ
ராத்திரி பகலாக ஒருபோதும் விலகாமல்
ராஜனை கையேந்தி தாலாட்டவோ
நாளும் நாளும் ராகம் தாளம்
சேரும் நேரம் தீரும் பாரம்
ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...

( தூங்காத விழிகள்…

ஆலிலை சிவப்பாக அங்கமும் நெருப்பாக
நூலிடை கொதிப்பேறும் நிலை என்னவோ
ஆதியும் புரியாமல் அந்தமும் தெரியாமல்
காதலில் அரங்கேறுரும் கதை அல்லவோ
மாதுளம் கனியாட மலராட கொடியாட
மாருதம் உறவாடும் கலை என்னவோ
வாலிபம் தடுமாற ஒருபோதை தலைக்கேற
வார்த்தையில் விலங்காத சுவையல்லவோ
மேலும் மேலும் மோகம் கூடும்
தேகம் யாவும் கீதம் பாடும்
ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...
ஆ... ஆ...

( தூங்காத விழிகள்…

No comments: