Thursday 14 April 2011

குருவாயூரப்பா குருவாயூரப்பா - புது புது அர்த்தங்கள்



 இசை : இளையராஜா  பாடல் : கவிஞர் வாலி
 குரல்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்-சித்ரா  வருடம் : 1989

குருவாயூரப்பா குருவாயூரப்பா
குருவாயூரப்பா குருவாயூரப்பா
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி
குருவாயூரப்பா குருவாயூரப்பா
வேண்டாத தெய்வமில்லை நீதானே பாக்கி
ராதை உனக்கு சொன்ன வேதமென்ன
நான் போகும் பாதை என்னாளும் உன் பாதை
ராதை உனக்கு சொன்ன வேதமென்ன
நான் போகும் பாதை என்னாளும் உன் பாதை

( குருவாயூரப்பா...

தேனாற்றங்கரையில் தெய்வீகக்குரலில்
நான்தான் ஒரு பாட்டிசைத்தேன்
தினந்தோறும் இரவில் நடு ஜாமம் வரையில்
நான்தானே அதைக் கேட்டிருந்தேன்
அரங்கேற்றந்தான் ஆகாமல்தான்
அலைபாயும் என் ஜீவநன்தான்
வா வா என் தேவா செம்பூவாய்
என் தேகம் சேராதோ உன் கைகளிலே

( குருவாயூரப்பா...

ஏகாந்த நினைவும் எறிகின்ற நிலவும்
என் மேலே ஒரு போர் தொடுக்க
எனை வந்து தழுவு ஏனிந்தப் பிரிவு
மானே வா உனை யார் தடுக்க
பரிமாறலாம் பசியாறலாம்
பூமாலை நீ சூடும் நாள்
மாது உன் மீது எப்போது என் மோகம்
பாயாதோ சொல் பூங்கொடியே

( குருவாயூரப்பா...

No comments: