Sunday 24 April 2011

உருகுதே மருகுதே - வெயில்



 இசை : ஜி.வி.பிரகாஷ்  பாடல் : நா.முத்துகுமார்
 குரல்கள் : சங்கர் மகாதேவன்
ஸ்ரேயா கோஷல்
 வருடம் : 2006

உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழலுதே உன்னைப் பார்த்ததாலே
தங்கம் உருகுதா அங்கம் கரையுதா
வெட்கம் உடையுதா முத்தம் தொடருதா
சொக்கித்தானே போகிறேனே மாமா கொஞ்ச நாளா

உருகுதே மருகுதே… ஒரே பார்வையாலே
உலகமே சுழலுதே உன்னைப் பார்த்ததாலே
தங்கம் உருகுதே அங்கம் கரையுதே
வெட்கம் உடையுதே முத்தம் தொடருதே
சொக்கித்தானே போகிறேனே நானும் கொஞ்ச நாளா ஓ...

( உருகுதே மருகுதே...

அம்புலியில் நனைந்து சந்திக்கிற பொழுது
அன்புக் கதை பேசிப்பேசி விடியுது இரவு
ஏழுகடல் தாண்டித்தான் ஏழுமலை தாண்டிதான்
எங்கருத்த மச்சான் கிட்ட ஓடி வரும் மனசு
நாம சேர்ந்து வாழும் காட்சி ஓட்டிப் பார்க்கிறேன்
காட்சி யாவும் நிசமா மாற கூட்டிப் போகிறேன்
ஓ... சாமி பார்த்து கும்பிடும் போதும்
நீதானே நெஞ்சில் இருக்க ஏ....

( உருகுதே மருகுதே ...

ஊரைவிட்டு எங்கேயோ வேரறுந்து நிக்கிறேன்
கூடுதந்த கிளிப்பெண்ணே உன்னாலதான் வாழுறேன்
கூரைப்பட்டுச் சேலைதான் வாங்கச் சொல்லி கேட்கிறேன்
கூடுவிட்டு கூடுபாயும் காதலால சுத்துறேன்
கடவுள்கிட்ட கருவறை கேட்டேன் உன்னை சுமக்கவா
உதிரம் முழுக்க உனக்கேதான்னு எழுதிக் கொடுக்கவா
ஓ... மையிட்ட கண்ணே உன்னை மறந்தா இறந்தே போவேன்

( ஓ... உருகுதே மருகுதே...

No comments: