இசை : ஹாரிஸ் ஜெயராஜ் | பாடல் : தாமரை |
குரல்கள் : கார்த்திக் | வருடம் : 2005 |
ஒரு மாலை இளவெயில் நேரம்
அழகான இலையுதிர் காலம்
ஒரு மாலை இளவெயில் நேரம்
அழகான இலையுதிர் காலம்
சற்று தொலைவிலே அவள் முகம் பார்த்தேன்
அங்கே தொலைந்தவன் நானே
சற்று தொலைவிலே அவள் முகம் பார்த்தேன்
அங்கே தொலைந்தவன் நானே
அவள் அள்ளி விட்ட பொய்கள்
நடு நடுவே கொஞ்சம் மெய்கள்
இதழோரம் சிரிப்போடு கேட்டு கொண்டே நின்றேன்
அவள் நின்று பேசும் ஒரு தருணம்
என் வாழ்வில் சர்க்கரை நிமிடம்
ஈர்க்கும் விசையை அவளிடம் கண்டேனே
கண்டேனே.. கண்டேனே...
( ஒரு மாலை இளவெயில்...
பார்த்துப் பழகிய நான்கு தினங்களில்
நடை உடை பாவனை மாற்றி விட்டாய்
சாலை முனைகளில் துரித உணவுகள்
வாங்கி உண்ணும் வாடிக்கை காட்டி விட்டாள்
கூச்சம் கொண்ட தென்றலா...
இவள் ஆயுள் நீண்ட மின்னலா...
உனக்கேற்ற ஆளாக என்னை மாற்றி கொண்டெனே
( ஒரு மாலை இளவெயில்...
பேசும் அழகினை கேட்டு ரசித்திட
பகல் நேரம் மொத்தமாய் கடந்தேனே
தூங்கும் அழகினை பார்த்து ரசித்திட
இரவெல்லாம் கண் விழித்து கிடப்பேனே
பனியில் சென்றால் உன் முகம்
என் மேலே நீராய் இறங்கும்
ஓ தலை சாய்த்து பார்த்தாளே தடுமாறி போனேனே
லல லால லல லல லாலா
லல லால லல லல லாலா
சற்று தொலைவிலே அவள் முகம் பார்தேன்
அங்கே தொலைந்தவன் நானே
( சற்று தொலைவிலே
No comments:
Post a Comment