Friday 29 April 2011

கனா காண்கிறேன் கனா - ஆனந்த தாண்டவம்



 இசை : ஜி.வி.பிரகாஷ்  பாடல் : வைரமுத்து
 குரல்கள் : நித்யஸ்ரீ-வினித்ரா-சுபா  வருடம் : 2009

கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே
கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே

மண்ணை தொட்டாடும் சேலை சேலை கொண்டு
மார்பை தொட்டாடும் தாலி தாலி கொண்டு
மடியை தொட்டாடும் மாலை மாலை கொண்டு மகிழ்வேன்
தினம் தினமும்
வாசம் கொண்டாடும் பூக்கள் பூக்கள் வைத்து
வாசல் கொள்ளாத கோலம் கோலமிட்டு
காதல் கொண்டாடும் கணவன் திருவடியில் மலர்வேன்

( கனா காண்கிறேன்...

என் தோழிகளும் உன் தோழர்களும் ஐயோ நம்மை கேலி செய்ய
என் சேலையும் உன் வேட்டியும் நாணும்
நீ கிள்ளிவிட நான் துள்ளியெழ ஆஹா அது இன்ப துன்பம்
நான் கிள்ளிவிட என் கைவிரல்கள் ஏங்கும்
தஞ்சாவூர் மேளம் கொட்ட தமிழ்நாடே வாழ்த்து சொல்ல
சிவகாசி வேட்டுச்சத்தம் ஊரைக் கிழிக்கும்
தென்னாட்டு நெய்யின் வாசம் செட்டிநாட்டு சமையல் வாசம்
நியூயார்க்கை தாண்டி கூட மூக்கை துளைக்கும்

( கனா காண்கிறேன்...

நம் பள்ளியறை நம் செல்ல அறை அன்பே அதில் பூக்கள் உண்டு
பூவாடையின்றி வேறாடைகள் இல்லை
ஆண் எனபதும் பெண் என்பதும் ஹையோ இனி அர்த்தமாகும்
நீ என்பதும் நான் என்பதும் இல்லை

மார்போடு பின்னிக்கொண்டு மணிமுத்தம் எண்ணிக்கொண்டு
மடியோடு வீடுகட்டி காதல் செய்குவேன்
உடல்கொண்ட ஆசையல்ல உயிர்கொண்ட ஆசை எந்தன்
உயிர்போகும் முன்னால் வாழ்வை வெற்றி கொள்ளுவேன்

( கனா காண்கிறேன்...

No comments: