இசை : ஹாரிஸ் ஜெயராஜ் | பாடல் : பா.விஜய் |
குரல்கள் : கிருஷ் - நரேஷ் ஐயர் | வருடம் : 2007 |
ஓரு முகமோ இரு முகமோ
முழுமுகமும் கலவரமோ
பயமறியாது இவன் தேசமோ
ஈவன் விழிகல் குறி தானோ
கண்ணசைவில் கவர்வானோ
வலியறியாது இவன் தேகமோ
( ஓரு முகமோ இரு முகமோ...
நொடியில் நொடியில் முடிவெடுப்பான்
இடியின் மடியில் தினம் படுப்பான்
அடியில் வெடியில் உயிரெடுப்பான்
நிழல் போல் இருப்பான்
எதிரும் புதிரும் போல் இருப்பான்
அதிரும் செயலில் பூப்பறிப்பான்
உதிரும் உயிரில் கணக்கெடுப்பான்
நெருப்பாய் நடப்பான்
உலகம் அதிகாலை சோம்பல் முறிக்கும்
ஆனால் இவன் கையில் தோட்டா தெறிக்கும்
ஓரு சமயம் இவன் செயல் நியாயம்
மறு சமயம் இவன் செயல் மாயம்
ஜகஜஜதோம் ஜஜொம் ஜகிட ஜகிட ஜகிட..
( ஓரு முகமோ இரு முகமோ...
தெறிக்கும் தெறிக்கும் இசைப்பிடிக்கும்
சிரிக்கும் சிரிக்கும் மனம் பிடிக்கும்
வெடிக்கும் வெடிக்கும் ஒலிப்பிடிக்கும்..
இரவின் தலைவன் ஹேய்...
எதையும் செய்வான் உடனுக்குடன்
தேனீர் விருந்து ஆபத்துடன்
செல்வான் வெல்வான் வேகத்துடன்
இயங்கும் இளைஞன்
ரோஜாக்கள் தோற்கும் இவனின் முகமே
உல் சென்று பார்த்தால் உறுமும் குணமே
அட போனால் போகட்டும் என்பான்
இவன் பகையை உணவென உண்பான்
ஜகஜஜதோம் ஜஜொம் ஜகிட ஜகிட ஜகிட ஜகக
( ஓரு முகமோ இரு முகமோ...
No comments:
Post a Comment