Wednesday 1 June 2011

எங்கிருந்தோ இளங்குயிலின் - பிரம்மா



 இசை : இளையராஜா  பாடல் : கவிஞர் வாலி
 குரல்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்  வருடம் : 1991

எங்கிருந்தோ இளங்குயிலின்
இன்னிசைக் கேட்டு கண்விழித்தேன்
நினைவு அலைகள் மனதில் எழும்பும் நேரம்
தட்டிவிட்டேன் மனக்கதவை
திறந்து பார்க்க விரைந்து வா
நெஞ்சம் உந்தன் நெஞ்சம் – கொண்ட
சஞ்சலங்கள் மறைய ...

( எங்கிருந்தோ இளங்குயிலின்...

நீங்காமல் தானே நிழல்போல நானே
வருவேன் உண் பின்னோடு எந்நாளுமே
பூப்போன்ற மனதை பொல்லாத மனதாய்
தவறாக எடைபோட்டு சென்றாலும்தான்
பாலைப்போல கள்ளும் கூட வெண்மையானது
பருகிடாது விளங்கிடாது உண்மையானது
நீயும் காணக்கூடும் இங்கு ஓர் தினம்
இந்த பால் மனம்

( எங்கிருந்தோ இளங்குயிலின்...

பூர்வீகம் உனக்கு எதுவென்று எனக்கு
மறைத்தாலும் என் கண்கள் எமாறுமா
புரியாத புதிரா விளங்காத விடையா
இருந்தாலும் உண்மைகள் பொய்யாகுமா
என்னைக் கண்டு அச்சம் கொள்ளத் தேவையில்லையே
வேலி மீது குற்றம் சொன்ன தோட்டம் இல்லையே
நண்பன் என்று என்னை ஏற்கும் நாள் வரும்
அந்த நாள் வரும்

( எங்கிருந்தோ இளங்குயிலின்...

No comments: