இசை : இளையராஜா | பாடல் : கவிஞர் வாலி |
குரல்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம் | வருடம் : 1992 |
கலைவாணியோ ராணியோ அவள்தான் யாரோ
சிலைமேனியோ தேவியோ எதுதான் பேரோ
அவ மேலழகும் தண்டைக் காலழகும்
தெனம் பார்த்திருந்தா வில்லுப்பாட்டு வரும்
( கலைவாணியோ ராணியோ
பாதந்தொடும் பூங்கொலுசு தானதந்தோம் பாட
வேதங்களும் நாதங்களும் வேண்டிவந்தது கூட
பாதங்கள பார்த்ததுமே பார்வை வர்லியே மேலே
வேதனைகளை மாத்திடும் அவ விரிஞ்ச செண்பகச்சோல
பூத்ததய்யா பூவு அது கையழகு
தூக்குதய்யா வாசம் அது மெய்யழகு
நான் வந்தேன் வாழ்த்திப் பாட
நல்லதை சொன்னேன் ராகத்தோட
கண்டேன் சீதைப்போல
கண்டதும் நின்னேன் சிலையைப்போல
இந்திரலோகம் சந்திரலோகம் சுந்தரலோகம் போற்ற
( கலைவாணியோ ராணியோ
கோடை மழை கொண்டு வரும்
கூந்தல் என்கிற மேகம்
ஜாடையில ஏத்தி விடும்
ராகம் என்கிற மோகம்
கோடியில ஒருத்தியம்மா கோலமயில் ராணி
ஆடி வரும் பூங்கலசம் அழகிருக்கும் மேனி
தேர் நடந்து தெருவில் வரும் ஊர்வலமா
ஊருலகில் அவளப் போல பேர் வருமா
நல்ல பளிங்கு போல சிரிப்பு
மனசப் பறிக்கும் பவள விரிப்பு
விளங்கிடாத இனிப்பு
விவரம் புரிஞ்சிடாத துடிப்பு
சந்திர ஜோதி வந்தது போல்
சுந்தர தேவி ஜொலிப்பு
( கலைவாணியோ ராணியோ
No comments:
Post a Comment