இசை : ஜி.வி.பிரகாஷ் | பாடல் : நா.முத்துகுமார் |
குரல்கள் : ஹரிஹரன் - சைந்தவி | வருடம் : 2016 |
உன்னாலே எந்நாளும்
என் ஜீவன் வாழுதே !
சொல்லாமல் உன் சுவாசம்
என் மூச்சில் சேருதே !!
உன் கைகள் கோர்க்கும் ஓர் நொடி;
என் கண்கள் ஓரம் நீர்த்துளி...
உன் மார்பில் சாய்ந்து சாகத் தோணுதே... ஓ...ஓ...
( உன்னாலே எந்நாளும்...
விடிந்தாலும் வானம் இருள் பூச வேண்டும்
மடி மீது சாய்ந்து கதைப்பேச வேண்டும்
முடியாத பார்வை நீ வீச வேண்டும்
முழுநேரம் என் மேல் உன் வாசம் வேண்டும்
இன்பம் எதுவரை - நாம்
போவோம் அதுவரை
நீ பார்க்கப் பார்க்க காதல் கூடுதே... ஓ... ஓ...
( உன்னாலே எந்நாளும்...
ஏராளம் ஆசை என் நெஞ்சில் தோன்றும்
அதையாவும் பேச பல ஜென்மம் வேண்டும்
ஓ... ஏழேழு ஜென்மம் ஒன்றாக சேர்ந்து
உன்னோடு இன்றே நான் வாழ வேண்டும்
காலம் முடியலாம் - நம்
காதல் முடியுமா
நீ பார்க்கப் பார்க்க காதல் கூடுதே... ஓ... ஓ...
( உன்னாலே எந்நாளும்...
No comments:
Post a Comment