Thursday 18 August 2016

உன்னாலே எந்நாளும் - தெறி



இசை : ஜி.வி.பிரகாஷ் பாடல் : நா.முத்துகுமார்
குரல்கள் : ஹரிஹரன் - சைந்தவி வருடம் : 2016


உன்னாலே எந்நாளும்
என் ஜீவன் வாழுதே !

சொல்லாமல் உன் சுவாசம்
என் மூச்சில் சேருதே !!

உன் கைகள் கோர்க்கும் ஓர் நொடி;
என் கண்கள் ஓரம் நீர்த்துளி...

உன் மார்பில் சாய்ந்து சாகத் தோணுதே... ஓ...ஓ...


( உன்னாலே எந்நாளும்...


விடிந்தாலும் வானம் இருள் பூச வேண்டும்
மடி மீது சாய்ந்து கதைப்பேச வேண்டும்

முடியாத பார்வை நீ வீச வேண்டும்
முழுநேரம் என் மேல் உன் வாசம் வேண்டும்

இன்பம் எதுவரை - நாம்
போவோம் அதுவரை

நீ பார்க்கப் பார்க்க காதல் கூடுதே... ஓ... ஓ...


( உன்னாலே எந்நாளும்...


ஏராளம் ஆசை என் நெஞ்சில் தோன்றும்
அதையாவும் பேச பல ஜென்மம் வேண்டும்

ஓ... ஏழேழு ஜென்மம் ஒன்றாக சேர்ந்து
உன்னோடு இன்றே நான் வாழ வேண்டும்

காலம் முடியலாம் - நம்
காதல் முடியுமா

நீ பார்க்கப் பார்க்க காதல் கூடுதே... ஓ... ஓ...

( உன்னாலே எந்நாளும்...



No comments: