Tuesday 30 August 2016

தமிழா நீ பேசுவது தமிழா - பாடலெடுத்து



இசை : கரிசல் கருணாநிதி பாடல் : காசி ஆனந்தன்
குரல்கள் : கரிசல் திருவுடையான் வருடம் : ----


பட்டினி கிடந்தது பசியால் மெலிந்து
பாழ்பட நேர்ந்தாலும் - எந்தன்
கட்டுடல் வளைந்து கைகால் மெலிந்து
கவலை மிகுந்தாலும் - வாழ்வு
கெட்டு நடுத்தெருவோடு கிடந்தே
கீழ்நிலை உற்றாலும் - நமைத்
தொட்டு வளர்த்த தமிழ்மகளின்
துயர் துடைக்க மறப்பேனா ???

தமிழா நீ பேசுவது தமிழா ?
தமிழா நீ பேசுவது தமிழா ?

அன்னையை தமிழ் வாயால் மம்மி என்றழைத்தாய்
அழகுக் குழந்தையை பேபி என்றழைத்தாய்
என்னடா தந்தையை டாடி என்றழைத்தாய்
இன்னுயிர் தமிழை கொன்று தொலைத்தாய்

தமிழா நீ பேசுவது தமிழா ?

உறவை லவ் என்றாய் உதவாத சேர்க்கை
ஒய்ஃப் என்றாய் மனைவியை பார் உந்தன் போக்கை
இரவை நைட் என்றால் விடியாது வாழ்க்கை
இனிப்பை ஸ்வீட் என்றால் அறுத்தெறி நாக்கை

தமிழா நீ பேசுவது தமிழா ?

வண்டிக்காரர் கேட்டார் லெஃப்டா ரைட்டா
வழக்கறிஞர் கேட்டார் என்ன தம்பி ஃபைட்டா
துண்டுக்காரர் கேட்டார் கூட்டம் லேட்டா
தொலையாதா தமிழ் இப்படிக் கேட்டால் ???

தமிழா நீ பேசுவது தமிழா ?

கொண்ட நண்பனை ஃபிரெண்டு என்பதா
கோலத்தமிழ் மொழியை ஆங்கிலம் தின்பதா
கண்டவரை எல்லாம் சார் என்று சொல்வதா
கண்முன்னே தாய்மொழி சாவது நல்லதா

தமிழா நீ பேசுவது தமிழா ?

பாட்டன் கையிலே வாக்கிங் ஸ்டிக்கா
பாட்டியின் உதட்டிலே லிப்ஸ்டிக்கா
வீட்டிலே பெண்களின் தலையிலே ரிப்பனா
வெள்ளைக்காரன்தான் நமக்கென்ன அப்பனா ???

தமிழா நீ பேசுவது தமிழா ?




No comments: