இசை : இளையராஜா | பாடல் : நா.முத்துகுமார் |
குரல்கள் : விஜய் ஏசுதாஸ் | வருடம் : 2003 |
எனக்குப் பிடித்த பாடல் - அது
உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை
எந்தன் மனது அறியுமே
என்னைப் பிடித்த நிலவு - அது
உன்னைப் பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து
நோயைக் கூட்டுமே
உதிர்வது பூக்களா
மனது வளர்த்த சோலையில்
காதல் பூக்கள் உதிருமா
( எனக்குப் பிடித்த பாடல்
பித்துப் பிடித்ததைப் போலே - அடி
பேச்சு குளறுதே
வண்டு குடைவதைப் போலே விழி
மனசைக் குடையுதே
காதலின் திருவிழா கண்களில் நடக்குதே
குழந்தையைப் போலவே இதயமும் தொலையுதே
வானத்தில் பறக்கிறேன்
மோகத்தில் மிதக்கிறேன்
காதலால் நானும் ஓர் காத்தாடி ஆகிறேன்
( எனக்குப் பிடித்த பாடல்
வெள்ளிக்கம்பிகளைப் போலே
ஒரு தூறல் போடுதோ
விண்ணும் மண்ணில் வந்து சேர
அது பாலம் போடுதே
நீர்த்துளி தீண்டினால்
நீ தொடும் ஞாபகம்
நீ தொட்ட இடமெங்கும்
வீணையின் தேன் ஸ்வரம்
ஆயிரம் அருவியாய்
அன்பிலே நனைக்கிறாய்
மேகம் போலே எனக்குள்ளே மோகம் வளர்த்து கலைக்கிறாய்
( எனக்குப் பிடித்த பாடல்
No comments:
Post a Comment