இசை : இமான் | பாடல் : யுகபாரதி |
குரல்கள் : நந்தினி ஸ்ரீகர் | வருடம் : 2016 |
கண்ணம்மா கண்ணம்மா அழகுப் பூஞ்சிலை
என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன்மழை
உன்னை நினைத்திருந்தால் அம்மம்மா நெஞ்சமே...
துள்ளி குதித்ததுதான் எங்கெங்கும் செல்லுமே...
ஒளி வீசும்... மணிதீபம்...
அது யாரோ... நீ...
( கண்ணம்மா... கண்ணம்மா…
செம்பருத்தி பூவப்போல சினேகமான வாய்மொழி
செல்லங்கொஞ்ச கோடை கூட ஆகிடாதோ மார்கழி
பால்நிலா உன் கையிலே சோறாகி போகுதே
வானவில் நீ சூடிட மேலாடை ஆகுதே
கண்ணம்மா... கண்ணம்மா… நில்லம்மா...ஆ...
உன்னை உள்ளம் எண்ணுதம்மா
( கண்ணம்மா... கண்ணம்மா…
உன்னுடைய கோலம் காண கோயில் நீங்கும் சாமியே
மண்ணளந்த பாதம் காண சோலையாகும் பூமியே
பாரதி உன்சாயலை பாட்டாக மாற்றுவான்
தேவதை நீதானென வாயார போற்றுவான்
கண்ணம்மா... கண்ணம்மா … என்னம்மா... ஆ...
வெட்கம் நெட்டி... தள்ளுதம்மா…
( கண்ணம்மா... கண்ணம்மா…
No comments:
Post a Comment