இசை : என்.ஆர்.ரகுநந்தன் | பாடல் : ஏகாதசி |
குரல்கள் : ஜி.வி.பிரகாஷ் | வருடம் : 2013 |
கோண கொண்டக்காரி குத்துற கண்ணால
கொன்னுதான் போறாளே...
நான் பாயில் படுக்கல
நோயில் கெடக்குறேன்
காரணம் யாருங்க
கேரளத்து சாரலு தானுங்க
( கோண கொண்டக்காரி...
தெனம் தெனம் திருக குள்ள கேப்பையாட்டம்
என்ன திரிக்குறா
அய்யய்யோ கடுகு துண்டு இடைய வச்சி
கெறங்க அடிக்குறா
குமரி புள்ள நேசம் - அட
கோழி கொழம்பு வாசம்
உள்ளுக்குள்ள ஒளிஞ்சிகிட்டு
உசுர அறுக்குறா
( கோண கொண்டக்காரி...
சொலக பாக்குறேன் இதயம் போல் தெரியுதே
அடுப்பு தீய போல் உசுரும் எரியுதே
காலுல நடக்குறேன் மனசுல பறக்குறேன்
அவ முகம் பாத்துட்டா அரையடி வளருரேன்
சேதாரம் இல்லாம செஞ்சதாரு அவள - அவ
பஞ்சாரம் போட்டுதான் கவுக்குறாளே ஆள
நான் ஆட்டு புழுக்க போல
சுடும் வெயிலு குள்ள கெடக்கேன்
அவ கூட்டி பெருக்கும் போது
நான் கூடக்குள்ள போவேன்
( கோண கொண்டக்காரி...
உதட்டு சிரிப்புல உசுரு கரையுதே
அவள நெனச்சுதான் வயிறு நெறயுதே
சோள தட்டதான் சொமைய தாக்குமா
ஆள சாய்க்குதே அள்ளிப்பூ ரெண்டுதான்
போரால சாவில்ல மாராலதான் சாவு
நூறாள தாக்குதே உசிலம்பட்டி சேவு
இங்க அருவா தூக்கத்தானே
நம்ம ஆளு கொறஞ்சு கிடக்கு
அவ பாத்து பிள்ள என்னப்போல
பெத்து கொடுக்கணும்
( கோண கொண்டக்காரி...
No comments:
Post a Comment