இசை : டி.இமான் | பாடல் : யுகபாரதி |
குரல்கள் : சத்யபிரகாஷ் | வருடம் : 2014 |
அம்மாடி உன் அழகு செமதூளு
உன்ன கண்டா பொழுதும் திருநாளு
உன பார்த்துதான் தாடுமாறுறேன்
புயல் காத்துல பொரியாகுறேன்
அடி மாடு நான் மெரண்டு ஓடுறேன்
ஒரு வார்த்த சொல்லு உயிர் தாரேன்
( அம்மாடி உன் அழகு...
முன்னழகில் நீயும் சீதை
பின்னழகில் ஏறும் போதை
பொட்ட புள்ள உன நான் பார்த்து
சொட்டு சொட்டா கரஞ்சேனே
ரெக்க கட்டி பறந்த ஆளு
பொட்டி குள்ள அடஞ்சேனே
ஆத்தாடி நீதான் அழுக்கடையாத பால்நொரை
சேத்தோட வாழ்ந்தும் கரை படியாத தாமரை
பூக்குற என தாக்குற
( அம்மாடி உன் அழகு...
கண்ணு ரெண்டு போதவில்ல
கட்டழக பாத்து சொல்ல
ஓட்டு மொத்த ஒயில காண
பத்து சென்மம் எடுப்பேனே
கட்டு செட்டா கனிஞ்ச உன்ன
கட்டி வச்சு ரசிப்பேனே
தேசாதி தேசம் வர தெரிஞ்சேனே ஆம்பள
ஆனாலும் கூட ரதி உனப் போல பாக்கல
ஏட்டுல எழும் பாட்டுல
( அம்மாடி உன் அழகு...
No comments:
Post a Comment