Saturday 2 February 2019

கண்ணான கண்ணே - விஸ்வாசம்



இசை : டி.இமான் பாடல் : தாமரை
குரல்கள் : சித் ஸ்ரீராம் வருடம் : 2018


கண்ணான கண்ணே கண்ணான கண்ணே
என் மீது சாயவா
புண்ணான நெஞ்சை பொன்னான கையால்
பூ போல நீவ வா
நான் காத்து நின்றேன் காலங்கள் தோறும்
என் ஏக்கம் தீருமா
நான் பார்த்து நின்றேன் பொன் வானம் எங்கும்
என் மின்னல் தோன்றுமா
தண்ணீராய் மேகம் தூறும்
கண்ணீர் சேரும்
கற்கண்டாய் மாறுமா

ஆராரிராரோ ராரோ ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ ராரோ ஆராரிராரோ

கண்ணான கண்ணே கண்ணான கண்ணே
என் மீது சாயவா
புண்ணான நெஞ்சை பொன்னான கையால்
பூ போல நீவ வா

அலைகடலின் நடுவே
அலைந்திடவா தனியே
படகெனவே உனையே பார்த்தேன் கண்ணே
புதை மணலில் விழுந்தே
புதைந்திடவே இருந்தேன்
குறுநகையை எறிந்தே மீட்டாய் என்னை
விண்ணோடும் மண்ணோடும் ஆடும் பெரும் ஊஞ்சல் மனதோரம்
கண்பட்டு நூல்விட்டுப் போகும் என ஏதோ பயம் கூடும்
மயில் ஒன்றைப் பார்க்கிறேன்
மழையாகி ஆடினேன்
இந்த உற்சாகம் போதும்
சாகத் தோன்றும் இதே வினாடி

கண்ணான கண்ணே கண்ணான கண்ணே
என் மீது சாயவா
புண்ணான நெஞ்சை பொன்னான கையால்
பூ போல நீவ வா
நீ தூங்கும் போது முன் நெற்றி மீது
முத்தங்கள் வைக்கணும்
போர்வைகள் போர்த்தி போகாமல் தாழ்த்தி
நான் காவல் காக்கணும்
எல்லோரும் தூங்கும் நேரம்
நானும் நீயும் மௌனத்தில் பேசணும்

ஆராரிராரோ ராரோ ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ ராரோ ஆராரிராரோ

கண்ணான கண்ணே... கண்ணான கண்ணே...



No comments: