Friday 4 March 2011

இருபது கோடி நிலவுகள் - துள்ளாத மனமும் துள்ளும்



 இசை : எஸ்.ஏ. ராஜ்குமார்  பாடல் : வைரமுத்து
 குரல்கள் : ஹரிஹரன்  வருடம் : 1999

இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மை ஆனதோ...
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ...
குழைகின்ற தங்கங்கள் கன்னங்கள் ஆகாதோ...
நெளிகின்ற வில் ரெண்டு புருவங்கள் ஆகாதோ

நூறுகோடி பெண்கள் உண்டு உன்போல் யாருமில்லையே -ஆனால்
கன்னி உந்தன் கண்கள் கண்கள் மட்டும் காணவில்லையே

( இருபது கோடி ...

தங்கமான கூந்தல் தாழ்ந்து வந்ததென்ன
வந்து உந்தன் பாதம் கண்டு வணக்கம் சொல்லவோ
தேன் மிதக்கும் உதடு சேர்ந்திருப்பதென்ன
ஒன்றையொன்று முத்தம் இட்டு இன்பம் கொள்ளவோ
மானிடபிறவி என்னடி மதிப்பு- உன்
கால்விரல் நகமாய் இருப்பதே சிறப்பு
நூறுகோடி பெண்கள் உண்டு உன்போல் யாருமில்லையே -ஆனால்
கன்னி உந்தன் கண்கள் கண்கள் மட்டும் காணவில்லையே

( இருபது கோடி ...

ஜுலை மாதம் பூக்கும் கொண்டை பூக்கள் போலே
சேலை கொண்ட பெண்ணின் அங்கம் தோற்றம் காட்டுதே
தாஜ்மஹாலின் வண்ணம் மாறக்கூடும் பெண்ணே
மின்னும் உந்தன் கன்னம் இன்னும் வண்ணம் கூடுதே
நிறமுள்ள மலர்கள் சோலைக்கு பெருமை
நீயுள்ள ஊரில் வசிப்பது பெருமை
நூறுகோடி பெண்கள் உண்டு உன்போல் யாருமில்லையே -ஆனால்
கன்னி உந்தன் கண்கள் கண்கள் மட்டும் காணவில்லையே

( இருபது கோடி ...

No comments: