இசை : இளையராஜா | பாடல் : வைரமுத்து |
குரல்கள் : கே.ஜே.ஜேசுதாஸ் | வருடம் : 1984 |
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா ...
அலைபோலவே விளையாடுமே சுகம் நூறாகுமே
மன்மேலே துள்ளும் மான் போலே
( பிள்ளை நிலா...
எந்நாளும் நம்மைவிட்டு போகாது வசந்தம்
தோளோடு ரோஜா ரெண்டு உறங்கும்
தள்ளாடும் பூக்களெல்லாம் விளையாட அழைக்கும்
ஏதேதோ எழைமனம் நினைக்கும்
தென்னை இளஞ்சோலை பாளை விடும் நாளை
கை இரண்டில் அள்ளிக்கொண்டு
காதோடு அன்னை மனம் பாடும் கண்கள் மூடும்
( பிள்ளை நிலா...
ஆளான சிங்கம் ரெண்டும் கைவீசி நடந்தால்
காலடியில் பூமியெல்லாம் அடங்கும்
சிங்கார தங்கம் ரெண்டும் தேர்போல வளர்ந்தால்
ஆகாயம் வந்து இங்கே வணங்கும்
எங்களால் தாயே உயிர் சுமந்தாயே
கூந்தலிலே முத்துச்சரம்
காப்பாத்தி கட்டி வைத்தாய் நீயே எங்கள் தாயே
( பிள்ளை நிலா...
No comments:
Post a Comment